காந்தியின் 69-வது நினைவுதினம்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர டி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி நினைவிடத்தில், மதநல் லிணக்க பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாடகர்கள் குழு பக்திபாடல்களை பாடினர்.

பாஜக. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்ரிரி ராவ் இந்தர்ஜித் சிங், முப்படை தளபதிகளான சுனில்லம்பா, பி.எஸ்.தனோவா மற்றும் பிபின் ராவத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் காந்தி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இன்று காலை 11 மணியளவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...