கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை

பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

பட்ஜெட்மூலம் தமிழகத்துக்கு தேவையான நல்லதிட்டங்களை கேட்பதற்காக கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் நான் டெல்லிக்கு வந்தேன். இதுதொடர்பாக சில மந்திரிகளை நான் பார்க்க இருக்கிறேன்.

ஜெயலலிதா மரணம் குறித்துவிசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அவரதுசாவில் தமிழக மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் டாக்டர்கள் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் குழப்பமானபதில்களே கிடைத்தன. இதனால் மக்கள் தெளிவுபெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

முதல்-அமைச்சர் என்ற முறையில்தான் ஓ.பன்னீர் செல்வத்துடன் பா.ஜனதாவுக்கு தொடர்புஇருக்கிறது. ஆட்சிக்கு ஆட்சி தொடர்பு இருக்கத்தான் செய்யும். கட்சிக்குகட்சி தொடர்பு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியை மத்திய அரசு உருக்குலைக்க வில்லை. இந்த குழப்பத்துக்கும், பா.ஜனதாவுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

தேர்ந்து எடுக்கப்பட்ட ஒருமுதல்-அமைச்சர், தான் மிரட்டப்பட்டதாக சொல்வதும், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தன்னை பார்க்க அனுமதிக்க வில்லை என்று கூறுவதும் மிகுந்தவேதனைக்கு உரியதாக, கவலை அளிப்பதாக உள்ளது. இதை தெளிவுபடுத்தும்பொறுப்பு சசிகலாவுக்கு உள்ளது.

கவர்னர் வித்யாசாகர் ராவ் ஒருதலைப்பட்சமாக செயல்படவில்லை. கவர்னர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்றைக்குகவர்னர் ஆகிறார்களோ அன்று முதல் ஜனநாயகத்துக்கு உட்பட்டு கவர்னர்களாகத்தான் செயல்படுகிறார்கள். வித்யாசாகர் ராவும் அப்படித்தான் செயல்படுகிறார். தமிழகத்தில் தெளிவான சூழ்நிலை இல்லாததால் கவர்னருக்கு காலஅவகாசம் தேவைப்படலாம். அதுமட்டுமல்ல, அவர் தமிழகத்துக்கும் கவர்னர்; மராட்டிய மாநிலத்துக்கும் கவர்னர். குழப்பத்துக்கு காரணம் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தானேதவிர, கவர்னர் அல்ல.

குழப்பமான இந்த சூழ்நிலையில் பா.ஜனதா தமிழக மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...