ஜெயலலிதா மரணத்தில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்று நடந்துள்ளது என மருத்துவரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

ஜெ.வின் மர்ம மரணம்குறித்து ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் சந்தேகம் கிளப்பிவருகின்றனர். இந்நிலையில் இது பற்றி தமிழிசை சவுந்தர ராஜன் கருத்து தெரிவித்த போது “ தீவிர சிகிச்சைபிரிவில் இருக்கும் ஒரு நோயாளியின் உடல் நிலையை நிமிடத்திற்கு நிமிடம் மருத்துவர்கள் சோதனைய்து பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
 

ஜெயலலிதா ஒருமுக்கிய தலைவராக இருந்ததால், அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என கூறியது நியாயமாக இருக்கலாம். ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல நிகழ்வுகள் நடந்துள்ளது.
 

75 நாட்கள் சிகிச்சை எடுத்தவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், நன்றாக சாப்பிடுகிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால், அப்போதுகூட புகைப்படம் வெளியாகவில்லை. அதுதான் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து நீதிமன்றத்தில்கூட அப்பல்லோ நிர்வாகம் தகவல் தர மறுக்கிறது. 
 

ரத்தசொந்தங்கள் கேட்டால் சிகிச்சை தொடர்பான அனைத்து விபரங்களையும் மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும். ஆனால், அவரின் ரத்தசொத்தங்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?
 

தற்போது சசிகலாவின் பினாமி ஆட்சி நடந்துவருகிறது. அவர்கள் மீது குற்றசாட்டு இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வேண்டியபொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை செய்யாவிடில் மக்கள் மத்தியில் சந்தேகம் இன்னும் அதிகரிக்கும்.
 

எந்த தவறும் நடை பெறவில்லை எனில், வெளிப்படையாக கூற ஏன் தயக்கம்? எதையும் சொல்ல முடியாது எனில், ஏதோ ஒன்று நடைபெற் றிருப்பதாக மக்கள் நினைக்கத் தோன்றும். ஒன்று ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், உரியவிசாரணை நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...