ஆன்மிகமே இந்தியாவின் பலம்

ஆன்மிகமே இந்தியாவின் பலம் , அதற்கு எந்தவொரு மதத்துடனும் தொடர் பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பரமஹம்ச யோகானந்தரால் நிறுவப்பட்ட இந்தியயோகதா சத்ஸங்க மடத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:


இந்தியாவின் பலத்தை சிலர் மக்கள் தொகையைக் கொண்டோ, பொருளாதார வளர்ச்சியை கொண்டோ நிர்ணயிக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் பலமே ஆன்மிகம் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
சிலர் ஆன்மிகத்தை மதத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கின்றனர். உண்மையில், ஆன்மிகம் வேறு, மதம்வேறு ஆகும்.


முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமும், இந்தியாவின் ஆன்மிக பலத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் யோகிகளும், துறவிகளும் ஆன் மிகத்தை வளர்ச்சி யடையச் செய்தார்கள். அவர்களில் ஒருவரான பரமஹம்ச யோகானந்தர், ஆன்மிகத்தைப் பரப்ப இந்தியாவை விட்டுச் சென்றாலும் அவர் இந்தியாவுடன் எப்பொதும் ஒருபிணைப்பைக் கொண்டிருந்தார்.


ஆன்மிகம் என்பதில் யோகாசனம் என்பது இறுதிநிலை அல்ல. யோகாசனம்தான் ஆன்மிகத்தின் நுழைவு வாயில் ஆகும். ஒருவர் ஒருமுறை யோகாசனத்தில் ஆர்வம்காட்டி அந்தப் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டால், அவர் வாழ்வின் ஒருஅங்கமாகவே யோகாசனம் ஆகிவிடும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...