வீட்டுவாடகையை வழங்க மத்திய அரசு முடிவு

ஸ்மார்ட் சிட்டிகளில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டுவாடகையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு நாடுமுழுவதும் 100 நகரங்களை தேர்வுசெய்து, அவற்றை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் மத்திய அரசு, இந்த நகரங்களில் வாழும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு வீட்டுவாடகை வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக புதிய வீட்டு வாடகை கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த புதியதிட்டமானது 2017–18–ம் நிதியாண்டில் தொடங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2,713 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நேரடியாக வழங்கப்படும்

இந்த திட்டத்தின் படி நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில்வசிக்கும் ஏழைகளுக்கான வீட்டுவாடகை வவுச்சராக (பண உறுதிச் சீட்டு) நேரடியாக வழங்கப்படும். குடியிருக்கும் பகுதியின் (நகர்) வகை மற்றும் அளவை சார்ந்தும், பரவலாக இருக்கும் வாடகை மதிப்பின் அடிப்படையிலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே இந்தவாடகை வவுச்சரின் மதிப்பை தீர்மானிக்கும்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் இந்தவவுச்சர்களை குடியிருப்பவர்கள், தங்கள் வீட்டு உரிமையாளரிடம் வழங்கலாம். அதை அவர் எந்த ஒரு குடிமகன் சேவைப் பிரிவிலும் கொடுத்து பணமாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த வவுச்சர் தொகையைவிட வாடகை தொகை அதிகமாக இருந்தால், மீதமுள்ள பணத்தை வீட்டு உரிமையாளருக்கு குடியிருப்போரே வழங்கவேண்டும்.

கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி நகர்ப்புறங்களில் 27.5 சதவீத மக்கள் வாடகைவீடுகளில் வசிப்பதாக கண்டறியப்பட்டது. இந்த நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமங்களில் வந்து குடியேறிய ஏழைகளுக்கு இந்ததிட்டம் மிகவும் பயனளிக்கும் என மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...