மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக்கூறி கடிதம்

உ.பி. சட்ட சபைத் தேர்தலில் பாஜக அமோகவெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி வாழ்த்துக்கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் அக்யூதாத் நவீத் என்ற சிறுமி வசித்து வருகிறார். 11 வயதான அந்தசிறுமி லாகூரில் கத்தீட்ரல் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
 
இவர் பிரதமர் மோடிக்கு உத்தர பிரதேச சட்ட சபைத் தேர்தல் வெற்றி பெற்றதற்காக, 2 பக்கம்கொண்ட வாழ்த்துக் கடிதத்தை கடந்த 13ம் தேதி எழுதியிருக்கிறார். இந்தகடிதம் சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக, அக்யூதாத் நவீத் கடிதத்தில் கூறியதாவது: சிறுவயது முதலே எனது தந்தை உலக அமைதியின் முக்கியத்துவத்தை எனக்கு சொல்லிகொடுத்து வளர்த்துள்ளார்.
 
உ.பி தேர்தல் வெற்றியின் மூலம் இந்தியமக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள். அதேபோல் இரு நாட்டிலும் அமைதியை நிலைநாட்டுவதன் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களின் இதயங்களை வெல்லமுடியும்  துப்பாக்கிகள் வாங்குவதற்கு பதிலாக நாம் புத்தகங்கள் வாங்கவேண்டும். அதேபோல் தோட்டாக்கள் வாங்குவதற்கு பதிலாக ஏழைமக்களுக்கு மருந்துகளை நாம் வாங்கவேண்டும். இரண்டு நாடுகளுக்கும் நல்லுறவை வளர்க்கும் ஒரு சிறந்தபாலமாக மோடி திகழவேண்டும் எனவும் அச்சிறுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
 
உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன் என்று தெரிவித்தார். பிரதமர்க்கு பாகிஸ்தான் சிறுமி எழுதியகடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...