சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் பாஜக.,வின் வேட்ப்பாளராக கங்கை அமரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். காலத்துக்கு ஏற்ற, சூழ்நிலைக்கு ஏற்ப்ப கடும் போட்டியைத் தரக்கூடிய சரியான தேர்வாகவே அரசியல் நோக்கர்களால் கூர்ந்து நோக்கப்படுகிறார்.
அமைதியான இடத்தில் கதை எழுத பாட்டெழுத வாங்கி போடப்பட்ட பங்களாவை, 1991ல் ஜெயலலிதா முதல்வரான போது சசிகலா கும்பல் அடித்துப்பிடிங்கினர். இதை கங்கை அமரன் பல நேரங்களில் வேதனையுடன் தைரியமாகவே கூறி வந்தார். மன்னார்குடி குடும்பத்தால் பதிக்கப்பட்ட பலாயிரம் குடும்பங்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் தான் 25ந்து வருடமாக அடிப்பட்டப் புலியாக சீறிக்கொண்டிருந்தவர் வஞ்சம் தீர்க்க வந்துவிட்டார் என்று கூறலாம்!. சசிகலா குடும்பத்தால் வஞ்சிக்கப் பட்ட, ஏமாற்றப்பட்ட ஓராயிரம் குடும்பங்களின் ஒரு பிரதியாக வந்து விட்டார் என்று கூறலாம்!!. மன்னார் குடி குடும்பத்தின் கொல்லைப்புற ஆட்சி கனவை தவிடு பொடியாக்கிட, அடுத்த மாற்று நாங்கள்தான் என்கிற திமுக.,வின் கனவை கலைத்து. கழகங்கள் இல்லா தமிழகம் என்கிற கனவை நிறைவேற்றிட, இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் தமிழக சட்டமன்றத்தில் தாமரையின் ஆட்சிக்கான அச்சாரம் போடப்போகிறார் என்றும் நாம் கூறலாம்!!!.
தற்போதைய மன்னார்குடி குடும்பத்தின் செயல்களால் கொதித்து போயுள்ள தமிழக மக்களுக்கு ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சரியான வடிகால். பணத்துக்கு மதிப்பளிக்காமல், வளர்ச்சிக்கு, ஊழலுக்கு எதிரான ஆட்சிக்கு வித்திடும் பாஜக.,வுக்கு வாக்களிப்பது சரியான வழியுமாகும்.
தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.