பிற்பட்ட முஸ்லிம்களுக்கு அரசியல்சாசன அந்தஸ்து கிடைக்க செய்யவே இதர பிற்பட்டோர் தேசிய கமி‌ஷன்

பாரதீய ஜனதா செயற்குழுகூட்டம் ஒடிசா மாநிலம் புவனேசு வரத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மாநில தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசின் சாதனைகள் மற்றும் கட்சியின்வளர்ச்சி ஆகியவை குறித்து பேசினார்கள்.

இறுதி நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–

நமது லட்சியமான வளர்ச்சியில் பெரும்சாதனையை அடைவதற்கு தயாராக, பா.ஜனதா தலைவர்களும், தொண்டர்களும் கடுமையாக உழைக்கவேண்டும்.

பா.ஜனதாவும், அதன் தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அரசும் பழங்குடியினர் முன்னேற்றத் துக்காக பலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமுதாய மற்றும் பொருளாதார சம நிலை என்ற சாதனையை இந்தியா அடையும். மக்களுக்கு ஆதரவான, நடவடிக்கைகள் சார்ந்த அணுகு முறையாலும் சிறந்த நிர்வாகம் உறுதி செய்யப் பட்டுள்ளது.

பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்துதரப்பு மக்களின் நலனுக்காகவும், எத்தகைய சுரண்டலுக்கு எதிராகவும் பாடுபட்டுவருகிறது.

முஸ்லிம் சகோதரிகளுக்கும் நீதிகிடைக்க வேண்டும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட கூடாது. முத்தலாக் பிரச்சினையால் முஸ்லிம் சமுதாயத்தில் எந்தபிளவும் ஏற்பட நாங்கள் விரும்ப வில்லை. நாங்கள் என்னசெய்ய இருக்கிறோம் என்றால், ஒருவேளை சமுதாய தீமைகள் ஏதாவது இருந்தால், அந்த சமுதாயத்தை விழிப்படையச் செய்து அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை எடுக்கவைப்போம்.

முஸ்லிம் சமுதாயத்தினர் பிற்பட்டவகுப்பினராக உள்ளனர். அவர்களில் மிகவும் விளிம்பில் இருப்பவர்களை முன்னேற்றம் அடையச்செய்வது பா.ஜ.க.,வின் கடமை. பிற்பட்ட முஸ்லிம்களுக்கு அரசியல்சாசன அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இதர பிற்பட்டோர் தேசியகமி‌ஷன் உருவாக்கப்பட்டது. அது தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறினாலும், மேல்சபையில் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு தொடர்ந்து சிலபிரச்சினைகளை பெரிதுபடுத்தி வருகின்றன. டெல்லி தேர்தலின்போது கிறிஸ்தவ ஆலயங்கள் மீதுநடந்த தாக்குதலை பெரிதுபடுத்தின. இப்போது மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள் பிரச்சினையை கூறிவருகின்றன. மக்கள் ஏதாவது புகார் தெரிவித்தால், அதனை தொண்டர்கள் பா.ஜனதா தலைவர்கள் மூலம் எனது கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...