இப்போது இருப்பதை விட கூடுதலான இடங்களைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்

பி.ஜே.பி கூட்டணி, 2019 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் மக்களவைத் தேர்தலில் இப்போது இருப்பதை விட கூடுதலான இடங்களைப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்' என்று ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சிஒன்றில், மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு கூறினார். மத்தியில் பிஜேபி ஆட்சி அமைந்து, வரும் 26 ஆம் தேதியோடு மூன்று ஆண்டுகள் முடிந்து, 4-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இந்நிலையில், அடுத்து வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க, நாடுமுழுவதும் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா,     95 நாள் சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். 


 ஜெய்ப்பூரில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையநாயுடு, "2014-ம் ஆண்டில் 282 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தோம். இப்போது, மோடியின் செல்வாக்கு இன்னும் அதிகரித்துள்ளது. வரும்தேர்தலில், இன்னும் அதிக இடங்களைப் பிடிப்போம். எதிர்க் கட்சித் தலைவர்களில் சிலர் ஜெயிலில் இருக்கிறார்கள். சிலர் பெயிலில் வெளியே உள்ளனர். அவர்கள் இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை. அவர்கள், அரசியலிலிருந்து அவுட் ஆகிவிட்டார்கள். இந்த மூன்றுஆண்டில், மோடி அரசின் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப, எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. சாதி, மத, மொழிமூலம் அரசியல் செய்வோரால் மக்களை இனி ஏமாற்றமுடியாது” என வெங்கைய நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...