பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை

பசுவதை செய்தால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்க வகைசெய்யும் திருத்தப்பட்ட சட்டத்தின் புதியவிதிகளை குஜராத் மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்டது.


குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா, அந்த மாநில சட்ட பேரவையில் கடந்த மார்ச் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திருத்தமசோதாவுக்கு மாநில ஆளுநர் ஓ.பி.கோலி கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், புதிய விதி முறைகளை அந்த மாநில அரசு சனிக் கிழமை வெளியிட்டது.


அதன்படி, பசுவதையில் ஈடுபடுவோருக்கு இனி அதிக பட்சம் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை அபராதமும் விதிக்க வகை செய்யப் பட்டுள்ளது. சட்ட விரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்களுக்கும், உரிய அனுமதிபெறாமல் மாடுகளை வேறொரு இடத்துக்கு இடமாற்றம் செய்பவர்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள்படி தண்டனை வழங்கப்படும்.


திருத்தப்பட்ட புதியசட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் குற்றம்சாட்டப் பட்டவர்கள் பிணையில் வெளிவர இயலாது. மாட்டிறைச்சியை சோதனை செய்து உறுதிப்படுத்த 5 இடங்களில் தடயவியல் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 நடமாடும் ஆய்வுக் கூட வேன்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
குஜராத் விலங்குகள் பாதுகாப்புச்சட்டம் திருத்தப்படுவதற்கு முன்பு பசுவதையில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டுவரை சிறையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக பதவி வகித்த நரேந்திர மோடி பசுவதைக்கு முழுமையாக தடைவிதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...