மாட்டிறைச்சிக்கு எதிராக பேசக்கூடாது என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனுக்கு மீண்டும் மிரட்டல் வந்துள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப் படுவதற்கு மத்திய அரசு கடும்கட்டுப்பாடு விதித்துள்ளதற்கு ஆதரவாக தமிழிசை சவுந்திரராஜன் பேசி வருகிறார். இந்நிலையில், கடந்தவாரம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த கடிதத்தில், மாட்டிறைச்சிக்கு எதிராக பேசுவதை தமிழிசை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கடும்விளைவுகளை சந்திக்க வேண்டிய திருக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப் பட்டிருந்தது.
இது தொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரித்துவந்த நிலையில், ஜூன் 2ம் தேதி தமிழிசைக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக விருகம் பாக்கம் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்திருந்த நிலையில், நேற்று மீண்டும் சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு ஒருமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இது குறித்து தமிழிசை அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார், ஏற்கெனவே பாஜக தலைமை அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியவரும், தற்போது கடிதம் அனுப்பியவரும் ஒரேநபரா என்றும், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் யார் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.