மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த வளர்ச்சியை காண இயலும்

மத்திய அரசுக்கு மாநிலஅரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த வளர்ச்சியை காணஇயலும் என்று மாநிலங்களவை உறுப்பினர் ரூபாகங்குலி தெரிவித்தார்.


பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிபொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும்விழா  மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மத்தியஅரசின் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அதன் ஒருபகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பில் கருத் தரங்கு சனிக் கிழமை மாலை நடைபெற்றது. இதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரூபா கங்குலி கலந்துகொண்டார்.


முன்னதாக, இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய அரசு மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. பொதுமக்களின் நலன் காக்கவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசானது மக்களுக்கான மானியங்களை அவர்களதுகைகளுக்கே நேரடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்பட்டு அரசுக்கும் பணம் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கு கடன் கிடைப்பதற்கான வழிமுறைகள் எளிதாக்கப் பட்டுள்ளன. திருப்பூர் தொழில் துறையில் வளர்ச்சிபெற்ற நகரம். இருப்பினும் நீராதாரம் உள்ளிட்டவை இங்கு மாசடைந் துள்ளன. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நாட்டைமீட்க தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்துக்கென பிரத்யேகமாக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்தியஅரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய மாநில அரசுகள் ஒத்துழைக்கவேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே ஒட்டுமொத்த வளர்ச்சியை காண இயலும்.


ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடவடிக்கை தொடக்கத்தில் சற்றுசிரமமாக இருந்தாலும், ஏராளமான வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...