மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும் மதுக்கடைகளை மூட வேண்டும்

மதுக்கடையை மூடவலியுறுத்தி பா.ஜ.க சார்பில் சென்னையில் இன்று கோட்டையைநோக்கி பேரணி நடைபெற்றது.

சேப்பாக்கத்தில் இருந்து பேரணிபுறப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்தியசெயலாளர் முரளிதரராவ் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் மதுவால் ஏற்படும் சீரழிவை வலியுறுத்தும் வகையில் பாடைகட்டியும், வெள்ளை சேலை கட்டி பெண்களும் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா மது இல்லாத ஆரோக்கியமான தமிழகத்தை விரும்புகிறது. ஆனால் அதிமுக.வும், திமுக.வும் மதுவுக்கு துணைபோகிறது. நாங்கள் பசும்பால் வேண்டும் என்கிறோம். அவர்கள் பட்டைச்சாராயம் வேண்டும் என்கிறார்கள், இதுதான் பா.ஜனதாவுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.

பசுவை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பா.ஜ.க என்றும் துணைநிற்கும் என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் கடைசி கடை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் தமிழக அரசு உடனடியாக கையில் எடுக்கவேண்டிய வி‌ஷயம் ஒன்றை மூடுவது, இன்னொன்றை திறப்பதுதான். அதாவது அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும். அதே நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது திமுக. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பிராயச்சித்தம் தேடப்போகிறார். ஒருகாலத்தில் இந்துக்களை திருடர்கள் என்று கூறியவர்கள் இன்று கோவில் குளங்களை தூர்வாரி பாவ விமோசனம் தேடிக்கொள்கிறார்கள்.

படித்து பழகு என்று சொல்ல வேண்டியவர்கள், குடித்துபழகு என்று தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள். எனவே ஒருகட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிட கட்சி இருக்கமுடியாது, இந்த நாட்டை காவிகள் ஆளலாம், பாவிகள் ஆளக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...