மதுக்கடையை மூடவலியுறுத்தி பா.ஜ.க சார்பில் சென்னையில் இன்று கோட்டையைநோக்கி பேரணி நடைபெற்றது.
சேப்பாக்கத்தில் இருந்து பேரணிபுறப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். அகில இந்தியசெயலாளர் முரளிதரராவ் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் மதுவால் ஏற்படும் சீரழிவை வலியுறுத்தும் வகையில் பாடைகட்டியும், வெள்ளை சேலை கட்டி பெண்களும் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா மது இல்லாத ஆரோக்கியமான தமிழகத்தை விரும்புகிறது. ஆனால் அதிமுக.வும், திமுக.வும் மதுவுக்கு துணைபோகிறது. நாங்கள் பசும்பால் வேண்டும் என்கிறோம். அவர்கள் பட்டைச்சாராயம் வேண்டும் என்கிறார்கள், இதுதான் பா.ஜனதாவுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
பசுவை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் பா.ஜ.க என்றும் துணைநிற்கும் என்றார்.
தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தில் கடைசி கடை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் தமிழக அரசு உடனடியாக கையில் எடுக்கவேண்டிய விஷயம் ஒன்றை மூடுவது, இன்னொன்றை திறப்பதுதான். அதாவது அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையங்களை திறக்கவேண்டும். அதே நேரத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும், தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியது திமுக. இதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பிராயச்சித்தம் தேடப்போகிறார். ஒருகாலத்தில் இந்துக்களை திருடர்கள் என்று கூறியவர்கள் இன்று கோவில் குளங்களை தூர்வாரி பாவ விமோசனம் தேடிக்கொள்கிறார்கள்.
படித்து பழகு என்று சொல்ல வேண்டியவர்கள், குடித்துபழகு என்று தமிழகத்தை ஆக்கிவிட்டார்கள். எனவே ஒருகட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிட கட்சி இருக்கமுடியாது, இந்த நாட்டை காவிகள் ஆளலாம், பாவிகள் ஆளக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.