லோக்பால் மசோதாவில் மக்கள் விருப்பப்படும் அம்சங்கள் கொண்டு வரப்படடும் என்று அரசு ஏற்றுகொண்டது . இதனையதொடந்து ஹசாரே இன்று காலை 10மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டதை முடித்து கொண்டார்
உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால் நெருக்கடி முற்றும் போதல்லாம் மக்கள் தெருவில் இறங்கி போராடுவார்கள், அந்த
போராட்டத்தின் முன்னே எப்படிப்பட்ட அரக்க குணம் கொன்ட அரசுகளும் அடி பணிந்துதான் ஆக வேண்டும் என்பதை காங்கிரஸ்கட்சி கவனிக்க தவறியது.
சுதந்திரம் கிடைத்த பிறகு முதலில் வெளிவந்த முந்த்ரா ஊழல் முதல், இன்றைய ஸ்பெக்ட்ரம், ஊழல் வரை தொடர்ந்து நடக்கும் ஊழல்களை பார்த்துபுழுங்கி கொண்டிருந்த மக்களின் உணர்வுகளுகு வடிகாலாக ஹசாரே வெளிப்பட்டபோது, மக்கள் குறிப்பாக இளைங்கர்கள் தன்னெழுச்சியாக அவர்பின்னால் அணிதிரள தொடங்கினர். இன்று தேசத்தை பீடித்திருக்கும பல பிரச்சினைகளில் மக்கள் ஒன்றுபடுவதற் கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு( இந்தியாவில் மட்டும்).
லஞ்சத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என எல்லோராலும் நம்பப்படும் ஒரு நபர் கிளம்பியபோது, தேசம் அவரின் பின்னால் அணி திரண்டதில் ஆச்சர்யம் இல்லை.
மக்களின் அந்தக்கோபத்தை புரிந்து கொள்ளாமல், காங்கிரஸ் கட்சி, அவர் மீது சேற்றை வாரிப்பூசுவதன் மூலமாக போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தது.
"தலைமுதல் கால்வரை ஊழல் பேர்விழியான ஒருவர் ஊழலை பற்றி பேசுவதை யாரும் ஏற்க_மாட்டார்கள்" என்று அன்னா ஹசாரேவை பற்றி மனீஷ் திவாரி அவதூறு பேசினார் . அதே மனீஷ்திவாரி இன்று மன்னிப்பு கேட்டுள்ளார். நேற்று வரை திமிராக பேசி கொண்டிருந்த ப.சிதம்பரம், கபில் சிபல், அம்பிகாசோனி போன்றோரை ஆளையே காணவில்லை.
உண்மையும் நேர்மையும் என்றும் தோற்காது பாரத் மாதாக்கி ஜே
தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.