பிஜேபியும் மற்ற மாநிலங்களும் ஏன் கான்கிரஸ் களவாணி அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியை எதிர்த்தன என்பதை மாநில நிதி அமைச்சர் ஜெயகுமார் புளிபோட்டு விளக்கியிருக்கீறார்.
மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படுவதை சமாளிக்க மத்திய அரசு நிதி தரவேண்டும் அது வெறுமனே வாக்குறுதியாக இல்லாமல் சட்டமாகவே இருக்கவேண்டும் என்பது தான் மாநிலங்களின் கோரிக்கை.
கான்கிரஸ் அதை ஏற்கவில்லை. பிஜேபி வந்தவுடன் அது முழுமையாக ஏற்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்திலேயே அந்த விதி சேர்க்கப்பட்டுள்ளது.
ஏன்னா இன்னைக்கு தர்றேன் என சொல்லிட்டு நாளைக்கு முடியாதுன்னு சொல்லிட்டா? அதுக்குத்தான் அது சட்டத்திலேயே இருக்கனும் என மாநிலங்கள் கேட்டன. கான்கிரஸ் முடியாது என சொல்லிவிட்டது.
மாநிலங்களின் வரி இழப்பை சமாளிக்க தனியே நிதி ஏற்படுத்தப்பட்டு அதிலே அதிக வருவாய் சேர்க்கப்படும். மாத மாதம் 5 ஆம் தேதி மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்படும். இதை மோடி தான் செய்திருக்கிறார். இது 5 வருடங்களுக்கு.
கூடவே மிக வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்கள் தேவைப்பட்டால் 2 வருடங்களுக்கு 1% வரியும் போட்டுக்கொள்ளலாம் என்பதையும் மோடி தான் ஏற்றார்.
மாநிலங்களின் கோரிக்கையான பெட்ரோல், மது, மின்சாரம் போன்றவற்றை வெளியே வைக்கவேண்டும் என்பதும் மோடி அரசால் தான் ஏற்கப்பட்டது.
ஜிஎஸ்டி கூட்டம் மாதம் முதல் சனிக்கிழமை காலை 11 மணீக்கு கூடும். அதிலே எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்க்கலாம். மாநிலங்களுக்கு 2/3 ஓட்டும் மத்திய அரசுக்கு 1/3 ஓட்டும் உள்ளது.
மாநிலங்கள் நினைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வரியை மாற்றிவிடலாம்.
நம்மூர் டுபாக்கூர்களோ சும்மா எப்படி பிஜேபி எதிர்த்தது என கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.