அவை நடைபெறும் போது பா.ஜ.க. எம்.பி.க்கள் கண்டிப்பாக உள்ளே இருக்கவேண்டும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் எதிர்க் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டுவருகின்றது. எதிர்க் கட்சிகளின் அமளிகளுக்கு நடுவே பல்வேறு மசோதாக்கள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தொடர்பான சட்டதிருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் விவாதத்துக்குவந்தது. விவாதம் முடிவடைந்து திருத்தங்கள் மீது வாக்கெடுப்பும் நடைபெற்றது.

 

வாக்கெடுப்பின்போது, பா.ஜ.க. தரப்பு எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச்சேர்ந்த சுமார் 30 எம்.பி.க்கள் அவையில் இல்லை. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிட்டது. அவர்கள் கொண்டுவந்த திருத்தங்கள் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. இது பா.ஜ.க. தரப்புக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில், பா.ஜ.க. பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அவை நடைபெறும் போது கண்டிப்பாக உள்ளே இருக்கவேண்டும் என்று பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.களுக்கு அமித்ஷா வலியுறுத்தினார்.  

 

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாராளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி அனந்த் குமார், ‘பா.ஜ.க. எம்.பி.க்கள்  நிச்சயம் அவையில் இருக்கவேண்டும். அவையில் எம்.பி.க்கள் இல்லாத விவகாரத்தை தலைவர் (அமித்ஷா) தீவிரமாக எடுத்துள்ளார். இதுபோன்று திரும்பவும் நடைபெறக் கூடாது” என்றார்.

 

இன்றைய கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவையில் இல்லாத வர்களின் பட்டியல் நேற்று இரவுகேட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...