ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக வேண்டும்

ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும்’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் விருதுவழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 9) நடந்தது. இதில், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று விருது வழங்கினார். பின்னர் அவர்பேசியதாவது: கர்நாடாகவில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி., என்றாலும் சிலவிஷயங்களை சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.,வும் மோடியும் என்ன செய்தார்கள் என்றுகேட்கலாம். உள்ளூர் சந்தையில் தேவைக்கு இருப்பதை போல மீதியை ஏற்றுமதி செய்யலாம்.

நிறைய உற்பத்திசெய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்குவிடவில்லை. அளவோடு உற்பத்தி செய்யமட்டுமே அனுமதி இருந்தது. சோசலிசம் பாணியில் இருந்து திட்டமிட்ட நிலையில், தற்போது நம்மஉற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இயற்கையான கொள்கைமாறுதல் செய்தது மோடி அரசு. 2021 பட்ஜெட்டில் பொது துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம்கிடையாது என அறிவிக்கபட்டது. நாட்டு நலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார்துறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர, தனியாருக்கு எங்குவாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சின்னசின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும். பின்டெக் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கின்றது. வெப்-3 டெக்னாலஜி, செயற்கை அறிவு பயன்படுத்தி, ஸ்டார்அப் தொழில்முனைவார் அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டும். கோவை வழிகாட்ட வேண்டும் என்பது எனதுவிருப்பம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...