ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக வேண்டும்

ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும்’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் விருதுவழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 9) நடந்தது. இதில், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று விருது வழங்கினார். பின்னர் அவர்பேசியதாவது: கர்நாடாகவில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி., என்றாலும் சிலவிஷயங்களை சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.,வும் மோடியும் என்ன செய்தார்கள் என்றுகேட்கலாம். உள்ளூர் சந்தையில் தேவைக்கு இருப்பதை போல மீதியை ஏற்றுமதி செய்யலாம்.

நிறைய உற்பத்திசெய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்குவிடவில்லை. அளவோடு உற்பத்தி செய்யமட்டுமே அனுமதி இருந்தது. சோசலிசம் பாணியில் இருந்து திட்டமிட்ட நிலையில், தற்போது நம்மஉற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இயற்கையான கொள்கைமாறுதல் செய்தது மோடி அரசு. 2021 பட்ஜெட்டில் பொது துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம்கிடையாது என அறிவிக்கபட்டது. நாட்டு நலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார்துறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர, தனியாருக்கு எங்குவாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சின்னசின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும். பின்டெக் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கின்றது. வெப்-3 டெக்னாலஜி, செயற்கை அறிவு பயன்படுத்தி, ஸ்டார்அப் தொழில்முனைவார் அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டும். கோவை வழிகாட்ட வேண்டும் என்பது எனதுவிருப்பம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...