மோடியுடன் மோதும் அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை

ஊழலுடன் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால், வேறு வழியின்றி லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன் என்று நிதிஷ்குமார் கூறினார்.

பீகார் மாநிலத்தில், நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதாதளம்-ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. துணை முதல்- மந்திரியாக இருந்த லாலு மகன் மீது சி.பி.ஐ. ஊழல்வழக்கு பதிவு செய்தது.

இதனால், அவரை பதவி விலகுமாறு நிதிஷ்குமார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் பதவி விலகமறுத்ததால், நிதிஷ்குமார் பதவி விலகினார். லாலு கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். மறுநாளே, பா.ஜனதா ஆதரவுடன், மீண்டும் முதல்மந்திரியாக பதவி ஏற்றார்.

இந்நிலையில், இந்தவிவகாரம் குறித்து நிதிஷ் குமார் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. நான் அதுபற்றி எந்த விளக்கமும் கேட்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு உரியபதில் அளிக்குமாறு மட்டுமே கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நிதிஷ்குமார் சி.பி.ஐ. அதிகாரியா? போலீசா?’ என்று என்னை கேலிசெய்தனர்.

லாலு பிரசாத் யாதவ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஊழலை கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள மாட்டேன் என்று பேசிவரும் என்னால் எப்படி அமைதியாக வேடிக்கை பார்க்கமுடியும்? அப்படி இருப்பது, ஊழலுடன் சமரசம் செய்து கொள்வதாக அர்த்தம் ஆகிவிடும். ஆகவே, லாலுவுடனான மகா கூட்டணியில் இருந்து விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை.

பிரதமர் மோடியுடன் மோதும்அளவுக்கு யாருக்கும் வலிமை இல்லை. ஆனால், மோடிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆட்சேப கரமான குற்றச்சாட்டுகளை கூறிவந்தது.

மகாகூட்டணியின் நலனுக்காக நான் அதை சகித்துக் கொண்டேன். இருப்பினும், லாலு பிரசாத்துக்கு எதிராக ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ஒருவர்கூட எதுவும் கூறியது இல்லை.

மதச்சார்பின்மை விஷயத்தில், யாரிடம் இருந்தும் நான் சான்றிதழ்பெற தேவையில்லை. மதச்சார்பின்மையின் பொருள் என்ன? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேர்ப்பதுதான் மதச்சார்பின்மையா?

துணை ஜனாதிபதி தேர்தலைபொறுத்தவரை, காங்கிரஸ் வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியைத்தான் ஆதரிப்போம். அவருக்கு ஏற்கனவே வாக்கு கொடுத்துவிட்டோம் இவ்வாறு நிதிஷ் குமார் கூறினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...