மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவு

டெல்லியில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். கூட்டத்தில், கட்சிதலைவர் அமித் ஷா பங்கேற்றார். கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, 2019ல் ஆளுங் கட்சியாக மக்களவை தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இதிலும் தனிப் பெரும்பான்மை வெற்றியுடன் ஆட்சியை தக்கவைக்க கட்சி, இப்போதே தீவிரமாக களமிறங்கி உள்ளது.

மத்திய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கான பொறுப்புகள் அடங்கிய செயல்திட்டத்தை கட்சி தலைவர் அமித்ஷா சமீபத்தில் வழங்கினார். கடந்தமக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இம்முறை வெற்றிபெற பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜ ஆளும் 13 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 6 துணைமுதல்வர்கள் கூட்டம் டெல்லியில் 3வது முறையாக நேற்று நடந்தது.  தமிழகம், பீகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை தொடர்ந்து சில முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படலாம் என முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின. அதற்கேற்றார் போல், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக சுற்றுப் பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு, முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மத்திய அரசின் முன்னோடித்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும், திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் மாநில முதல்வர்கள், பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். தேர்தலுக்கு தயாராக மாநிலமுதல்வர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி சிலஅதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மத்திய அமைச்சரவையில் மாற்றம்செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.