நாஞ்சில் சம்பத் நாவடக்கம் கொள்ள வேண்டும்

நாஞ்சில் சம்பத் நாவடக்கம் கொள்ள வேண்டும், பணத்துக்கும், பதவிக்கும், ஆட்சிக்குமான பங்காளிச் சண்டையில் தினகரனின் அல்லக்கையாக இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்.,சை எல்லாம் தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தவர். பணப் பித்து முத்தி பாஜக.,வையும், அதன் மாநிலத் தலைவரையும் பெண் என்றும் பாராமல் தரம் தாழ்ந்து விமர்சித்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூலிக்கு மாரடித்தாலும் அதற்க்கும் ஒரு எல்லை உண்டு என்ற நிதானம் கொள்ளவேண்டும், மாற்று சித்தாந்தங்கள் கொண்டவர்கள் கூட அவரது இலக்கிய தமிழால் ஈர்க்கப்பட்டது உண்டு. ஆனால் இன்று கோடிகளில் அலங்கரிக்கப்பட்ட நடை பிணங்களின் மத்தியில் வாழ்வதால் என்னவோ நாலாந்தர பேச்சாளராக இன்று உருவகம் பெற்றுவிட்டார்.

அவரது இலக்கிய பேச்சை ரசித்தவர்கள், இன்று தொலைகாட்சி பேட்டிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக் கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், ஜெயலலிதாவை அம்மா என்று புகழ்ந்த என் நாக்கு சசிகலவுக்காக புரளாது. தவிடு நெல் ஆகாது, வான்கோழி மயிலாகாது, கறந்த பால் மடி புகாது என்றெல்லாம் டயலாக் விட்டார். ஜெயலலிதா தந்த இன்னோவா வாகனத்தை திருப்பி தந்தார். ஆனால் நான்காம் நாளே தவிடு நெல் ஆனது, கறந்த பால் மடி புகுந்தது, சின்னம்மா பெரியம்மா ஆனார்.

ஆம் பெரிய சன்மானத்தை பெற்றதன் அடையாளமாக. ஜெயலலிதாவுக்காக  புரண்ட அவரது நாக்கு சசிகலா, தினகரனின் புகழை பாட சுழன்றது, டிடிவி தினகரன், காலம் தந்த தலைவன்; திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பவர் என்றெல்லாம் இன்று வரை ஓரவாக சுழன்று கொண்டிருக்கிறது. தினகரனை புகழ்வதற்காக மக்கள் காறி உமிழ்ந்தால் துடைத்துக் கொள்வேன் என பேட்டியும் அளித்தாகி விட்டது.

இப்படி தரம் தாழ்ந்து பணப் போதையில் நிதானம் இழந்து விட்ட சம்பத்துக்கு பாஜக தொண்டர்கள், முற்றுகை போரட்டங்களின் மூலமும்,  வழக்குகளின் மூலமும் சரியான பதிலடியை தந்துள்ளனர். நாக்கு எத்திசையும் புரளும் 'காசேதான் கடவுளப்பா'  என்ற எண்ணம் படைத்த சம்பத்துக்களுக்கு இது ஒன்றே சரியான சம்பட்டி அடி.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.