பெண்களை மதிக்காத வீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘அய்யா… புண்ணிய வான்களே! என்னைத் திட்டினாலும் பரவாயில்லை… அதையும்கொஞ்சம் அழகு தமிழில் திட்டுங்கள்…’ என்று கெஞ்சியது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அண்ணாதுரை பெயரில் வழங்கப்பட்ட விருதைபெற்ற நாஞ்சில் சம்பத் என்ற மகானுபாவர், தமிழிசையை பற்றிபேசும் போது, ‘இரு மாநிலங்களுக்கு இப்போது ஒருத்தி கவர்னராக இருக்கிறாள்’ எனக்கூறி, தனக்கே உரிய நரகல்நடையில் விமர்சனம் செய்துள்ளார். ஏன் இப்படி ஒருமையில், தரக்குறைவாகப் பேசினீர்கள் என்று நியாயம் கேட்டதுக்கு, ‘மகாகவி பாரதியாரே, பராசக்தியை பற்றி புகழ்ந்து பாடும்போது, சுடர் மிகும் அறிவோடு என்னைப் படைத்துவிட்டாயடி’ என்று ஒருமையில் தான் பாடி இருக்கிறார். அபிராமிப் பட்டரும், ‘சொல்லடி சிவசக்தி, நில்லடி என் முன்னாலே’ என்று ஒருமையில் தான் பாடியுள்ளார். தெய்வங்களையே வாடி போடி, சொல்லடிநில்லடி என்று புலவர்கள் பாடியிருக்கும் போது,

சாதாரண மனுஷியான கவர்னர் தமிழிசையை, ‘அவள் கவர்னராக இருக்கிறாள்’ என்று ஒருமையில் பேசியதுதவறே அல்ல! இப்படி ஒருமையில் பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி ஓடிஒளிய மாட்டேன்’ என்று, ரொம்ப தெனாவட்டாகப் பதில் சொல்லி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
திராவிட கட்சியினரும், அவர்களின் வழிவந்தவர்களும், பெண்களை கேவலப்படுத்தி பேசுவது ஒன்றும் புதிதல்ல. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையே, நடிகை பானுமதி பற்றி சட்டசபையில் பேசும் போது, ‘அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல’ என்று எகத்தாளமாகக் கூறினார். திருமணமாகாத ஜெயலலிதாவை, திருமதி ஜெயலலிதா என அழைத்து அசிங்கப்படுத்தினார் கருணாநிதி. அதுமட்டுமா… மதுரையில் தி.மு.க., ரவுடிகளால், முன்னாள் பிரதமர் இந்திரா கடுமையாகத் தாக்கப்பட்டு, ரத்தம்சிந்திய போது, அம்மையாருக்கு ரத்தம் எங்கேவடிகிறது என்று கேட்டு கேவலப்படுத்தி மகிழ்ந்தவரும் அதே கருணாநிதி தான்.

சட்ட சபையில் கருணாநிதி முன்னிலையில், துச்சாதனனாக மாறி, ஜெயலலிதாவின் சேலையை இழுத்து அசிங்கப் படுத்தியவர் தான் தற்போதைய அமைச்சர் துரைமுருகன். ‘அடப்பாவிகளா! என்னைத்திட்டினாலும் பரவாயில்லை… கொஞ்சம் அழகுதமிழில் திட்டுங்கள். அது, எனக்கு காதில்தேனாக வந்து பாயும்’ என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். இதைவிட நாகரிகமாக, நாஞ்சில் சம்பத்தை கண்டனம் செய்யமுடியாது; இனியாவது அவர் திருந்தினால் சரிதான். பெண்களை மதிக்காதவீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

 

நன்றி என்.தொல்காப்பியன்

தினமலர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...