பெண்களை மதிக்காத வீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘அய்யா… புண்ணிய வான்களே! என்னைத் திட்டினாலும் பரவாயில்லை… அதையும்கொஞ்சம் அழகு தமிழில் திட்டுங்கள்…’ என்று கெஞ்சியது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அண்ணாதுரை பெயரில் வழங்கப்பட்ட விருதைபெற்ற நாஞ்சில் சம்பத் என்ற மகானுபாவர், தமிழிசையை பற்றிபேசும் போது, ‘இரு மாநிலங்களுக்கு இப்போது ஒருத்தி கவர்னராக இருக்கிறாள்’ எனக்கூறி, தனக்கே உரிய நரகல்நடையில் விமர்சனம் செய்துள்ளார். ஏன் இப்படி ஒருமையில், தரக்குறைவாகப் பேசினீர்கள் என்று நியாயம் கேட்டதுக்கு, ‘மகாகவி பாரதியாரே, பராசக்தியை பற்றி புகழ்ந்து பாடும்போது, சுடர் மிகும் அறிவோடு என்னைப் படைத்துவிட்டாயடி’ என்று ஒருமையில் தான் பாடி இருக்கிறார். அபிராமிப் பட்டரும், ‘சொல்லடி சிவசக்தி, நில்லடி என் முன்னாலே’ என்று ஒருமையில் தான் பாடியுள்ளார். தெய்வங்களையே வாடி போடி, சொல்லடிநில்லடி என்று புலவர்கள் பாடியிருக்கும் போது,

சாதாரண மனுஷியான கவர்னர் தமிழிசையை, ‘அவள் கவர்னராக இருக்கிறாள்’ என்று ஒருமையில் பேசியதுதவறே அல்ல! இப்படி ஒருமையில் பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி ஓடிஒளிய மாட்டேன்’ என்று, ரொம்ப தெனாவட்டாகப் பதில் சொல்லி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
திராவிட கட்சியினரும், அவர்களின் வழிவந்தவர்களும், பெண்களை கேவலப்படுத்தி பேசுவது ஒன்றும் புதிதல்ல. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையே, நடிகை பானுமதி பற்றி சட்டசபையில் பேசும் போது, ‘அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல’ என்று எகத்தாளமாகக் கூறினார். திருமணமாகாத ஜெயலலிதாவை, திருமதி ஜெயலலிதா என அழைத்து அசிங்கப்படுத்தினார் கருணாநிதி. அதுமட்டுமா… மதுரையில் தி.மு.க., ரவுடிகளால், முன்னாள் பிரதமர் இந்திரா கடுமையாகத் தாக்கப்பட்டு, ரத்தம்சிந்திய போது, அம்மையாருக்கு ரத்தம் எங்கேவடிகிறது என்று கேட்டு கேவலப்படுத்தி மகிழ்ந்தவரும் அதே கருணாநிதி தான்.

சட்ட சபையில் கருணாநிதி முன்னிலையில், துச்சாதனனாக மாறி, ஜெயலலிதாவின் சேலையை இழுத்து அசிங்கப் படுத்தியவர் தான் தற்போதைய அமைச்சர் துரைமுருகன். ‘அடப்பாவிகளா! என்னைத்திட்டினாலும் பரவாயில்லை… கொஞ்சம் அழகுதமிழில் திட்டுங்கள். அது, எனக்கு காதில்தேனாக வந்து பாயும்’ என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். இதைவிட நாகரிகமாக, நாஞ்சில் சம்பத்தை கண்டனம் செய்யமுடியாது; இனியாவது அவர் திருந்தினால் சரிதான். பெண்களை மதிக்காதவீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

 

நன்றி என்.தொல்காப்பியன்

தினமலர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...