மாணவர்களை தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு

மாணவர்களை தவறாக வழி நடத்தி, அவர்களை நீட்தேர்வுக்கு எதிராக தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீட்தேர்வுக்கு தமிழகம் எதிரானது அல்ல. அது வேண்டுமென்றே தமிழகத்திற்கு எதிரானது போல் முன்னிறுத்தப் படுகிறது. எத்தனை கிராமப்புற மாணவர்கள் நீட்தேர்வு மூலம் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள், எவ்வளவு பேருக்கு நியாயம் கிடைத்திருக்கிறது, பாமர மக்கள், நடுத்தர குடும்பத்துக் குழந்தைகள் எந்தளவுக்கு மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள் என்று கணக்கே இல்லாமல் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? என்னிடம் கணக்கு இருக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், பால்வியாபாரம் செய்பவர்கள் என 3000 மாணவர்கள் என்னை சந்தித்து நீட்தேர்வால் பயன் அடைந்ததாக சொல்லி இருக்கிறார்கள். நீட் தேர்வால் பணக்கார பிள்ளைகளும், வடஇந்திய மாணவர்களும் பயன் அடைந்ததாக தவறான கருத்து முன்னிறுத்தப்படுகிறது. நீட் தேர்வால் சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏழ்மையான, நடுத்தரகுடும்பத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசியல் வாதிகள் இந்த சூழ்நிலையை தங்கள் அரசியலுக்காகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.

மாணவர்களை தவறாக வழி நடத்தி, அவர்களை தெருவில் இறங்கிபோராட வைப்பது தவறு. மாணவர்களே தெருவுக்கு வாருங்கள் என்று அரசியல்வாதிகள் அழைப்பது தவறு. எதுநல்லது கெட்டது என்று மாணவச் செல்வங்களுக்கே தெரியும்'' என்று தமிழிசை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...