சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :

இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்தியமந்திரி பொன். ராதாகிருஷ்ணன், சட்டசபை சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ். அதிகாரிகள் மலர் செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர்.வரவேற்புக்கு பின்னர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சற்று நேரம் ஓய்வெடுத்த அவர், அங்கு சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் உற்பத்தி அலகை தொடங்கி வைத்தார். மராட்டிய மாநில கவர்னரும், தமிழக முன்னாள் (பொறுப்பு) கவர்னருமான வித்யாசாகர் ராவ் எழுதிய நூலை வெளியிட்டார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இந்திய அறிவியல் விழாவில் பங்கேற்றார். நாளை லலித் கலா அகடமியில் நடைபெறும் மறைந்த கர்நாடக இசைப பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைக்கும் வெங்கையா நாயுடு, ஆந்திர வர்த்தக சபையின் 90-ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி சென்னை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...