பா.ஜ.க,வின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன், காங்கிரஸ்சின் வாரிசு அரசியல் எடுபடாது

பா.ஜ.க,வின் குஜராத் கவுரவயாத்திரையின் நிறைவையொட்டி, நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


வரும் சட்ட சபை தேர்தலில், வளர்ச்சி திட்டநடவடிக்கைகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சியால் போட்டியிடமுடியாது. குஜராத் மக்களுக்கு எதிராகவே, காங்கிரஸ் செயல்பட்டு வந்தது.சர்தார் சரோவர் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்ள வில்லை.
 

அதனால், வரும் தேர்தலில், பா.ஜ.க,வின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன், காங்கிரஸ்சின் வாரிசு அரசியல் எடுபடாது.


பலதலைவர்களை உருவாக்கிய மிக நீண்டவரலாறு உடைய காங்கிரஸ் கட்சி, தற்போது பொய்யை பரப்பிவருகிறது; மக்களிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு சேவை வரிவிதிப்பு முறை குறித்து, பலபொய் தகவல்களை காங்கிரஸ் பரப்பிவருகிறது.


இந்த வரிவிதிப்பு முறையை கொண்டு வந்ததில், காங்கிரஸ் கட்சிக்கும் பங்குள்ளது. ஜி.எஸ்.டி.,யில் வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் ஏதாவதுபிரச்னை இருந்தால், அதற்கு தீர்வுகாண்போம். லஞ்சம், ஊழலுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சி, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் நம்மை குறைகூறுகிறது. எந்ததிட்டத்தை அறிவித்தாலும், அதை குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்; அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...