எதிர்கட்சிகள் நம்பிக்கை யில்லாதவை

சமூகநீதியை காப்பதுபோல் எதிர் கட்சிகள் நாடகம் ஆடுகின்றன. ஆனால் பா.ஜ.க.,தான் இந்த நாட்டின் பலதரப்பு மக்களின் வாழ்வை உயர்த்த பாடுபடுகிறது” என பா.ஜ., தினத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

பா.ஜ., நிறுவன தினத்தை யொட்டி இன்று (ஏப்.06) கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி வீடியோகான்பரன்சிங் மூலம் உரையாற்றுகையில் அவர் மேலும் பேசிய தாவது:

இந்நாள் சிறப்பாக கொண்டாடப் பட வேண்டிய நாள். ஹனுமன் ஜெயந்தி கொண்டாடும் நாளில் இப்போது இருக்கிறோம். ஹனுமன் ஒருதியாகி. இது போல் நாமும் இந்த நாட்டிற்கு உழைக்கவேண்டும். ஹனுமன் போல் பா.ஜ., உழைக்கிறது. இந்தியா இப்போது எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. 2014 முதல் இந்தியா புதியஉத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. அரசியல் கலாசாரத்தை மாற்றியது பா.ஜ., ஜனநாயக கொள்கைகளை பலப்படுத்த பா.ஜ., பாடுபட்டு வருகிறது.

இந்த தேசத்தின் வளர்ச்சியே பா.ஜ.,வின் தாரகமந்திரம். அனைத்து விஷயங்களிலும் உயர்ந்தது இந்த நாடுதான். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜ.,விரும்புவ தில்லை. சமூகநீதியே எங்களுக்கு முக்கியம். எதிர்கட்சிகள் சமூகநீதியை காப்பது போல் நாடகம் ஆடுகிறது. பெண்கள் அதிகாரத்திற்கு பா.ஜ., வழிவகுக்கிறது. காங்கிரஸ்கட்சி வாரிசு அரசியல் , இன வேறுபாடு வளர்த்தல் என்பதை பின்பற்றி வருகிறது. ஏழைகளையும், மலைவாழ் மக்களையும் காங்கிரஸ் இழிவாக பார்க்கிறது.

எதிர்கட்சிகள் நம்பிக்கை யில்லாதவை. அக்கட்சிகளால் யாருக்கும் பயன் கிடைக்காது.என்னை வீழ்த்த எதிர் கட்சிகள் பொய்சொல்கிறது. பா.ஜ., குறித்து தவறான பிரசாரத்தை எதிர் கட்சிகள் செய்து வருகின்றன .என்னை குழிதோண்டி புதைப்பதையே எதிர்ட்சிகள் சிந்தித்து வருகின்றன. ஆனால் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர் கட்சிகளின் சதியும் , பொய் பிரசாரமும் எடுபடாது.

காஷ்மீரின் அமைதி குறித்து கடந்தகால ஆட்சியாளர்கள் கவலைப்பட வில்லை. காஷ்மீரின் சிறப்புஅந்தஸ்து ரத்து, 370 வது சட்ட பிரிவு குறித்து எதிர் கட்சியினர் தவறான பிரசாரம் செய்தனர். ஏழைகளுக்கு கழிப்பறை , இலவச வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். 80 கோடி பேருக்கு இலவச ரேசன்பொருட்கள் கொடுத்துள்ளோம். இதுதான் சமூகநீதி. நாம் அனைத்து இந்தியர்களின் இதயங்களை வெல்லவேண்டும். இதற்கு பா.ஜ, காரிய தரிசிகள் பாடுபட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...