போகிறபோக்கில் சேற்றை மற்றவர் மீது வாரி இறைத்து விடலாமா?

அமித்ஷா அவர்களின் மகன் திரு. ஜெய்ஷா அவர்கள் மீது "தி ஒயர்" என்ற மின் இதழ் அவதூறு பரப்பிய போது அந்த இதழின் ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக ஜெய்ஷா மானநஷ்ட வழக்கு தொடர போவதாக தெரிவித்தார்.

உடனே கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வந்துவிட்டதாக இடதுசாரி ஊடகவியலாளர்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் கதறினார்கள். நேர்மையானவர்களாக இருந்திருந்தால் வழக்கை சந்திக்க முன்வந்திருப்பார்கள். போகிறபோக்கில் சேற்றை மற்றவர் மீது வாரி இறைத்து விடலாம்; கேட்க யாரும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் பாதிக்கப் பட்டவர் வழக்கு தொடர்ந்தால் கதறுவார்கள்.

அதேபோல் ஒரு நிலைமை தான் நடிகர் ஜோசப் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப் படத்திற்கும் வந்துள்ளது. அரசாங்கத்தின் திட்டங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் பொய்யான, ஆதாரமற்ற வசனங்களை பேசிவிட்டு அதற்கு எதிர்ப்பு கிளம்பும்போது கருத்துரிமை பாதிக்கப்படுவதாக தொடரச்சியாக புலம்பி வருகிறார்கள்.

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்பது விதி. அவதூறு பரப்பினால் அதற்கான விளைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜிவ்கொலை பற்றிய குற்றப்பத்திரிக்கை திரைப்படம் வெளியாக விடாத காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட்களின் படுகொலைகளை தோலுரித்த TP 51 என்ற படத்தை வெளியிடாமல் தடைபெற்ற கம்யூனிஸ்டுகளும் கருத்து சுதந்திர வகுப்பெடுப்பது தான் கேலிக்கூத்து.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...