ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி

காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கவேண்டும் என்று கூறிய ப.சிதம்பரம் ஒருதேசவிரோதி என்றும் அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

 

காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தினார். இதுகுறித்து குஜராத்மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவேண்டும். அதே வேளையில் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்படி காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப் பட வேண்டும்” என்றுகூறினார். ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, “ காங்கிரஸ் கட்சி ஜம்முகாஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது. இதுமிகவும் முக்கியமான பிரச்சனை. இதுதான் 1947 முதல் காங்கிரஸ்கட்சியின் தவறான கொள்கையாக இருந்துவருகிறது. காஷ்மீர் பிரச்சனைக்கும் அது தான் காரணம். காங்கிரஸ்கட்சி ஒட்டுமொத்த நாட்டையும் ஏமாற்றுகிறது. பழையதவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வதற்கு பதிலாக நாட்டிற்கு பிரச்சனையை உருவாக்க விரும்புகிறது” என்றார். மேலும் சிதம்பரத்தின் கருத்து, கட்சியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடா என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தவேண்டும் என்று அருண்ஜெட்லி கூறினார்.

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், “சிதம்பரம் விரைவில் சிறைக்குசெல்வார். ஒரு தேசவிரோதியை போல் அவர்பேசுகிறார். அவர் சிறைக்கு செல்லும்போது, காஷ்மீரில் இருந்து சிலர் அவருக்காக கண்ணீர்விடுவார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...