அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்

அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும். அங்கு வேறு எதுவும்கட்ட அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்ற பேச்சுகே இடமில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தர்ம சான்ஸத்’ (இந்து மத) என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றுவருகிறது. பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்தசுவாமி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் 2-ம் நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடாதிபதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது:

இந்த மாநாட்டின் முக்கியநோக்கம் அயோத்தியில் ராமர்கோயிலை கம்பீரமாக மீண்டும் கட்டுவது தான். இதற்காக ஏற்கெனவே திட்டம் வகுக்கப்பட்டு, அடுத்த கட்டபணிகள் நடந்துவருகிறது. முன்பே சேகரிக்கப்பட்ட கற்களை கொண்டுதான் ராமர் கோயில் கட்டப்படும். அங்கு வேறு எதுவும் கட்ட அனுமதிக்கமுடியாது. ஏனென்றால் அது ராமர் கோயில் இருந்த இடம்.

இந்த சூழலில் ஒருவர்  ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனை தானேமுன்னின்று நடத்துவதாகவும் சொல்லி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ராமர்கோயில் கட்டும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த நபரின் பேச்சுக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அறிவிப்புக்கும் எந்ததொடர்பும் இல்லை என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்து மதசுவாமிகள் சுய விளம்பரத்துக்காக எதையும் செய்யக் கூடாது. நாட்டு மக்களின் மனதை அறிந்து அறிவிக்க வேண்டும். அயோத்தியில் கம்பீரமாக ராமர் கோயிலைக்கட்ட அனைவரும் விரும்புகின்றனர். இதற்கு எந்த எதிர்ப்பும்வராது. எனவே ராமர் கோயில் கட்டுவதை தவிர, தற்போது வேறு எதுவும் முக்கியமான வேலை இல்லை.

இதே கருத்தை ஆமோதித்த விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, “அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதில் விஷ்வஇந்து பரிஷத்தின் சர்வதேச உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக இருக்கி ன்றனர். இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தலாம் என ரவிசங்கர் குரு பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தசுவாமி தலைமையில் ராமர் கோயிலை கட்டும் பணியை நானே முன்னின்று மேற்கொள்வேன்''என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...