அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும்

அயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும். அங்கு வேறு எதுவும்கட்ட அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை என்ற பேச்சுகே இடமில்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், உடுப்பியில் விஷ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளின் சார்பில் ‘தர்ம சான்ஸத்’ (இந்து மத) என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றுவருகிறது. பெஜாவர் மடாதிபதி விசுவேஸ்வர தீர்த்தசுவாமி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டின் 2-ம் நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மடாதிபதிகள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது:

இந்த மாநாட்டின் முக்கியநோக்கம் அயோத்தியில் ராமர்கோயிலை கம்பீரமாக மீண்டும் கட்டுவது தான். இதற்காக ஏற்கெனவே திட்டம் வகுக்கப்பட்டு, அடுத்த கட்டபணிகள் நடந்துவருகிறது. முன்பே சேகரிக்கப்பட்ட கற்களை கொண்டுதான் ராமர் கோயில் கட்டப்படும். அங்கு வேறு எதுவும் கட்ட அனுமதிக்கமுடியாது. ஏனென்றால் அது ராமர் கோயில் இருந்த இடம்.

இந்த சூழலில் ஒருவர்  ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அதனை தானேமுன்னின்று நடத்துவதாகவும் சொல்லி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை ராமர்கோயில் கட்டும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த நபரின் பேச்சுக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் அறிவிப்புக்கும் எந்ததொடர்பும் இல்லை என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இந்து மதசுவாமிகள் சுய விளம்பரத்துக்காக எதையும் செய்யக் கூடாது. நாட்டு மக்களின் மனதை அறிந்து அறிவிக்க வேண்டும். அயோத்தியில் கம்பீரமாக ராமர் கோயிலைக்கட்ட அனைவரும் விரும்புகின்றனர். இதற்கு எந்த எதிர்ப்பும்வராது. எனவே ராமர் கோயில் கட்டுவதை தவிர, தற்போது வேறு எதுவும் முக்கியமான வேலை இல்லை.

இதே கருத்தை ஆமோதித்த விஷ்வ இந்துபரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா, “அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதில் விஷ்வஇந்து பரிஷத்தின் சர்வதேச உறுப்பினர்கள் அனைவரும் உறுதியாக இருக்கி ன்றனர். இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்தலாம் என ரவிசங்கர் குரு பேசியது அவரது தனிப்பட்ட கருத்தாகும். பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்தசுவாமி தலைமையில் ராமர் கோயிலை கட்டும் பணியை நானே முன்னின்று மேற்கொள்வேன்''என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...