தமிழகம் மாற வேண்டும்: இல. கணேசன்

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவு க்காக அவிநாசி சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி ரகு என்றபொறியாளர் பலியானார். இந்தசம்பவம் கோவையில் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க எதிரொலித்தது. அரசுநிதியில் அமைக்கப்பட்டுவரும் ஆபத்தான, விதிமீறல் பிளக்ஸ்பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பிளக்ஸ்பேனர் பிரச்சினை குறித்து

பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறும்போது, ‘சாலை போக்கு வரத்துக்கும், மக்களுக்கும் இடையூறாக பிளக்ஸ்பேனர் வைக்க கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு. ஆனால் பேனர்கள் வைக்கலாம், அதில் உயிரோடு உள்ள தலைவர்கள் படங்களை வைக்கக் கூடாது என்ற வகையில் நீதிமன்றம் கூறியிருப்பதே முரண்பாடாக உள்ளது. கட்- அவுட் கலாச்சாரம் தவறான முன்னுதாரணம். இது தவிர்க்கப்படவேண்டியது’ என்றார்.

பாஜக மூத்த தலைவரும், எம்பி.,யுமான இல.கணேசன் கூறும் போது, ‘கோவையில் அலங்கார வளைவினால் ஏற்பட்ட உயிர்ப் பலி விபத்துதானா என்ற கேள்வியை எழுப்புகிறது. அதில் முழுமையான விசாரணை தேவை. அதேபோல கட் அவுட், பேனர்கள் வைப்பதில் நிச்சயம் வரைமுறைகள் தேவை. பலமாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால், தமிழகத்தைப்போல மக்களை பாதிக்கும் விளம்பரங்களை எந்தமாநிலத்திலும் பார்த்ததில்லை. தேர்தல் சமயங்களில் கூட அந்த நிலை இருக்காது. எனவே தமிழகம் நிச்சயம் மாறி ஆகவேண்டும். அதேசமயம், மறைந்த தலைவர்கள் படத்தைமட்டும் பேனர்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...