சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும்

உலகளவில் மூன்றாவது பெரியபொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ்பிரபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அடுத்த சில ஆண்டுகளில் இந்தவளர்ச்சியை அடைய இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.

சிறு தொழில்துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இது தொடர் பாக கூறியதாவது; எஸ்.எம்.இ துறையின் பங்களிப்புடன், இந்திய ஜிடிபியில் உற்பத்தித்துறை யின் பங்களிப்பு 20 சதவீதமாக இருப்பதை அரசு உறுதிபடுத்தும். பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு மிகச்சிறந்த உத்திகளை வழங்கும். இதன்காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு 5 லட்சம்கோடி டாலர் என்கிற நிலையை எட்டும். இதில் உற்பத்தி துறையிலிருந்து மட்டும் 1 லட்சம்கோடி டாலர் பங்களிப்பு இருக்கும். உற்பத்தித்துறையின் வளர்ச்சியை சாத்தியமாக்க சர்வதேச வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அடையாளம் காணும் முயற்சிகளிலும் அரசுஈடுபட்டுள்ளது.

2008-ம் ஆண்டில் சர்வதேச மந்தநிலை உருவானபோது மிகப்பெரிய வங்கிகள் அதிக நஷ்டத்தை சந்தித்ததாக சில நாடுகள் கூறின. இந்தவங்கிகளுக்கு அதிக அளவிலான தொகை மறுமூலதனம் செய்யப்பட்டது. ஆனால் சிறுதொழில் நிறுவனங்கள் சிறிய அளவிலான வெற்றிபெற்றதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. வங்கிகள் எவ்வளவு பெரியதாக இருந்ததோ அவ்வளவு பெரியதோல்வியை சந்தித்தன. சிறிய நிறுவனங்கள் தங்களுக்கேற்ற சிறியவெற்றியை சந்தித்தன. அதனால் எஸ்எம்இ துறையில் உலக நாடுகள் சிறிய அளவில் முதலீடுகளைசெய்தன. அதன் காரணமாக இப்போது சர்வதேச மந்த நிலை சீரடைந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...