ராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புபடை தலைமை இயக்குநரிடம் கேட்டறிந்தார். 

ஒகி புயல் தமிழகத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளாமாநிலத்தின் பல பகுதிகளை புரட்டி போட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. புயல்பாதிப்பிற்குள்ளான அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுவரை கன்னியாகுமரியில் மட்டும் புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடலுக்குள்சென்ற 18 கன்னியாகுமரி மீனவர்கள் மற்றும் 150 கேரள மீனவர்கள் திரும்பவில்லை. அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புயல் பாதித்துள்ள பகுதிகளில் தேசியபேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கூடுதலாக மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மின் இணைப்புகளை சரிசெய்யும் பணியில் 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஒகிபுயல் நிலவரங்களை கண்காணித்து ‌வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் புயல்பாதிப்புகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புபடை தலைமை இயக்குநரிடம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்துள்ளார். தகவல்களின் அடிப்படையில் வெள்ளப்பாதிப்பு நிதி மற்றும் பாதிப்படைந்த பகுதிகளுக்கான மீட்புநடவடிக்கை நிதியை மத்திய உள்துறை ஒதுக்கீடு செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...