சொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டமில்லை

சொத்து பரிவர்த் தனைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணையமைச்சர் ஹர்தீப்சிங் புரி கடந்த மாதம் கருத்து தெரிவிக்கையில், "சொத்து பரிவர்த்தனை களுடன் ஆதாரை இணைப்பது சிறந்தயோசனை ' என்று கூறியிருந்தார். இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஹர்தீப்சிங் புரி செவ்வாய்க்கிழமை எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், தற்போதைக்கு, சொத்து பரிவர்த்தனைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதைக் கட்டாயமாக்கும்திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவித்தார்.


பினாமி சொத்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே சூசகமாக தெரிவித்திருந்தார். இதனால், சொத்து பரிவர்த் தனைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் படலாம் என்ற யூகங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உணவுப்பாதுகாப்பு திட்டம்: இதனிடையே, மக்களவையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் சி.ஆர்.சௌதரி செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துக் கூறியதாவது:


உணவு மானியத்திட்டத்துடன் ஆதாரை அடிப்படையாக கொண்ட பயோமெட்ரிக் முறையில் பயனாளிகளை இணைப்பதன் நோக்கம் தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளை சரியாக அடையாளம் காண்பது தான். அதன் படி, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கடந்த 2013-2017 கால கட்டத்தில் 2.75 கோடி போலிரேஷன் கார்டுகளை ஒழித்துள்ளன. ஆதார் அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலமே இதுசாத்தியமானது என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார். உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருநபருக்கு மாதந்தோறும் ரூ.1 முதல் ரூ.3 வரையிலான விலையில் 5 கிலோ உணவுதானியங்களை அரசு வழங்கி வருகிறது. இச்சட்டத்தின் கீழ் 80 கோடி பேருக்கும் மேல் கொண்டுவரப் பட்டுள்ளனர். இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.1.40 கோடி செலவாவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...