ஆர்.கே நகர் விற்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்

இந்த ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் முடிவுகளால் எல்ல கட்சிகளும் பின்னடைவை சந்தித்திருக்கிறது அதை விட மேலாய் தமிழகமே மாபெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது, பணம் இருந்தால் தேர்தல் வெற்றியையும், பதவியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்பது மறுபடியும் தமிழக அரசியலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்.கே நகர் விற்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். திரு. தினகரன் ஆர்.கே நகரில் சுயேச்சையாக நிற்கப்போகிறார் என்ற உடனேயே  அந்த தொகுதியை விலை பேசி வாங்க போகிறார் என்ற நிலை தான் ஆரம்பத்திலே உருவானது எனவே தான் முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக சாலை மறியலில் ஈடு பட்டது, தேர்தல் ஆணையம் முற்றிலுமாக செயலிழந்து நிற்கிறது, பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தவிக்கிறது இந்த தேர்தல் வெற்றி ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட சவால் மட்டுமல்ல ஆபத்து என்றே சொல்லலாம் இது பாஜக வுக்கு மட்டுமல்ல அத்தனை கட்சிகளுமே பின்னடைவு ஏனென்றால் அனைவரும் சமதளத்தில் இருந்து போட்டியிட வேண்டும் என்பதற்காக தான்  தேர்தல் செலவு உச்ச வரம்பே இருக்கிறது ஆனால் இங்கே அந்த வரம்பை மீறி செலவு செய்து பெற்ற வெற்றி என்பது நிதர்சனம்.

ஆர்.கே நகரில் வாக்களித்த பெண்கள் ஒன்றை நினைத்து பார்த்திருக்க வேண்டும் அங்கே தினகரன் பெற்ற வெற்றி, முன்னாள் முதல்வர் ஜெ அவர்களை சிறை செல்ல காரணமாக இருந்த சசிகலாவின் வெற்றியே. அவரது இறுதி நாட்களில் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு ஜெ அவர்களின் நிழல் படத்தை சிகிச்சை பெரும் பொழுது அவருக்கே தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டு ஓர் ஆண்டு கழித்து ஓட்டுக்காக வெளியிட்டது சசிகலாவின் நம்பிக்கை துரோகத்தின் வெளிப்பாடு என்பதை ஆர்.கே நகர் தாய் குலங்கள் உணரவில்லை என்பதே வேதனை.

கடந்த 30 ஆண்டுகளாக யாருடைய கட்டுப்பாட்டில் ஜெ அவர்களும் அதிமுக வும் தமிழகமும் இயங்கியதோ அதே குடும்பத்தின் பிடியில் மீண்டும் சிக்கி இருப்பதை ஆர்.கே நகர் மக்கள் எப்படி ஒப்புக்கொண்டார்கள்? எனவே தார்மிக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஆர்.கே நகர் தோற்றுவிட்டதே என்ற ஆதங்கம் எனக்கு. இந்த தேர்தலில் தினகரன் வெற்றியும் நடந்த நடைமுறைகளும் தமிழகத்தில் உள்ள அத்தனை தலைவர்களுமே கவலையோடு உற்றுநோக்கி சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரம் இது, இதனை சமூக அக்கறையோடு ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் அணுகவேண்டிய நேரம் இது என்பதே என் கருத்து.

திமுக வும் அதன் கூட்டணி தலைவர்களும் தாங்கள் ஏன் வைப்பு தொகையை கூட மீட்டெடுக்காமல் போனது ஏன் என தங்களை சுய பரிசோதை செய்யாமல் இதிலும் பாஜக வை குறை சொல்லுவது தான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. பாஜக ஜனநாய கடமையாற்ற களத்தில் இருக்க வேண்டும் என்றே தேர்தலில் போட்டி போட்டோம் ஆனால் களங்கப்படாமல் களப்பணியாற்றினோம் அப்போது தான் பிற கட்சிகளால் களங்கப்பட்ட களத்தையும் எங்களால் உணர முடிந்தது ஆக பாஜக வை பொறுத்தவரையில் நங்கள் மீண்டெழுந்து வெற்றி பெறுவோம் தற்போது நடந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் 3 தொகுதியில் பாஜக அமோக வெற்றி பெற்றதை போல் வருங்காலத்தி தமிழகத்திலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உண்டு அந்த காலம் தான் தமிழகத்தின் பொற்காலமாக அமையும் என்பது உறுதி.

இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆளும் பாஜக தமிழகத்தில் ஆளும் நாள் வெகு தொலைவில் இல்லை அதன் மூலம் மற்ற மாநில மக்கள் பெரும் நன்மைகளையும், வளர்ச்சிகளையும் ஊழல் இல்லா நிர்வாகத்தையும் தமிழகமும் பெரும் வாய்ப்பு விரைவில் கைகூடும் என்று நம்பிக்கையோடு நங்கள் உழைப்போம்.

காசுப் பணத்தால் களங்கப்பட்டு இருந்து தேர்தல் களத்தில் கலங்காமல் களப்பணியாற்றிய பாஜக தொடர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி.

நோட்டாவை தேடும் தலைமுறைக்கு ஓர் அன்பான வேண்டுகோள் உங்கள் தொகுதியில் உங்கள் ஓட்டிற்காக பல கட்சிகள் நிறுத்தும் வேட்ப்பாளர்களுக்குள் நேர்மையான, திறமையான சேவை செய்யும் யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் நோட்டா வுக்கு போடுவதால் நல்ல வேட்பாளர்கள் கூட புறக்கணிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது இத்தனையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.

வருங்காலத்தில் மக்கள் மனநிலை மாறும் என நம்புகிறோம், நாளை நமதே. நல்லதே நடக்கும் காத்திருப்போம்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

மாநில தலைவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...