வீரச் சிறுவர்களின் அமரகாவியம்

 "அது மட்டும் ஒருபோதும் நடக்காது. எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர மதம் மாற மாட்டோம் "

வீரச் சிறுவர்களின் அமரகாவியம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு

ஜொராவர்சிங் (வயது 9),
பதேஹ்சிங் ( வயது 7)

சீக்கியர்களின் பத்தாவது குரு குருகோவிந்தசிம்மனின புதல்வர்கள்.

1704ஆம் ஆண்டு டிசம்பர் ஸரஹிந்த் நவாப் படைகளால் சிறைபிடிக்கப் பட்டனர். மூன்று நாட்கள் சிறுவர்களை மதம்மாற்றிட பல்வேறு வழிகளில் முயற்சி நடந்தது.

வீரச்சிறுவர்கள் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக இருந்தனர்.

நான்காவது நாள், அதாவது 1704, டிசம்பர் 26.

இரு வீரச்சிறுவர்களையும் உயிரோடு சுவர் எழுப்பி கொல்ல தீர்ப்பானது.

இரு வீரச்சிறுவர்களையும் சுற்றி செங்கல்லை கொண்டு சுவர் எழுப்பப்பட்டன.

ஒவ்வொரு செங்கல்லை வைக்கும் போதும் 'மதம் மாற தயாரா'? என கேள்வி எழுப்பப்பட்டது.

"அது மட்டும் ஒருபோதும் நடக்காது. எங்கள் உயிரைக் கொடுப்போமே தவிர மதம் மாற மாட்டோம் " வீரச் சிறுவர்கள் முழக்கம் இட்டனர்.

சிறியவன் பதேஹ்சிங் கழுத்து உயரம் வரை செங்கல் எழுப்பப்பட்டது.

பெரியவன் ஜொராவர்சிங் கண்ணில் கண்ணீர்.

சிறியவன் கேட்கிறான் ' அண்ணா, பயந்து விட்டாயா. ஏன் அழுகிறாய்'.

பெரியவன் ஜொராவர்சிங் கூறுகிறான், 'நீ என்னை விட சிறியவன். ஆனால் உனக்கு தர்மத்திற்காக உயிர் விடும் வாய்ப்பு முதலில் கிடைக்கிறது. பெரியவனான எனக்கு கிடைக்கவில்லை என்று எண்ணி மனதில் கஷ்டமாக இருக்கிறது '

வீரச்சிறுவர்களின் வீர மரணம் பற்றி அறிந்த சேட்ஜி தோடர்மால் என்பவர் அந்த இடம் அளவுக்கு பொற்காசுகளை நவாப் இடம் கொடுத்து அந்த புண்ணிய பூமியை வாங்கி, வீரச்சிறுவர்களை வேத முறைப்படி தகனம் செய்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...