இஸ்ரோ தலைவரான முதல் தமிழர்!


இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழரான சிவன் நியமிக்கப்பட்டுள்ளது தமிழர்களை பெருமிதம் கொள்ள செய்துள்ளது.

நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை அலங்கரிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

2015 ஜனவரி 12ம் தேதி முதல் இஸ்ரோவின் தலைவராக உள்ள கிரன்குமாரின் பதவிக்காலம் ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் புதிய தலைவராக சிவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எம்.ஐ.டி (MIT) எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாடிகல் இன்ஜினியரிங் படித்த சிவன், 1982ம் ஆண்டு இஸ்ரோவில் நுழைந்து பி.எஸ்.எல்.வி (PSLV) உள்ளிட்ட ராக்கெட் திட்டங்களில் பணியாற்றியவர். தற்போது கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பயணியாற்றி வருகிறார்.

ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைப் படைக்க காரணமாக இருந்தது ராக்கெட் ஸ்பெசலிஸ்டான சிவனின் சாதனையாகவே பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்த தமிழரான சிவனின் பங்களிப்பு முக்கியக் காரணமாகும்.

விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக சிவன் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் சிறப்பு மிக்க கிரையோஜெனிக் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டு இயங்கக் கூடியது கிரையோஜெனிக் எஞ்ஜின்.

இந்தியாவின் 3 செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக் கோள்களை (பிற நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள்) இஸ்ரோ விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள சிவன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தற்போது தனது முழு மனதும் அடுத்து விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட் குறித்துதான் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த முறை ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த முறை அதிக கவனம் செலுத்தி வெற்றியை நோக்கி உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், யு.ஆர்.ராவ் உள்ளிட்ட மாமேதைகள் தலைமையேற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்பது மிகப்பெரிய கடப்பாடு நிறைந்தது என்றும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.


சிவன் சாதனை கால அட்டவணை

➤ சென்னை எம்.ஐ.டியில் 1980-ல் ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.

➤ பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பை 1982ம் ஆண்டில் முடித்தார்.

➤ இஸ்ரோவில் பிஎஸ்எல்வி திட்டத்தில் 1982ம் ஆண்டு சேர்ந்தார்.

➤ இஸ்ரோவின் திட்டமிடல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் பகுப்பாய்வில் அளப்பரிய பங்களிப்பை சிவன் வழங்கினார்.

➤ பணியில் இருந்துகொண்டே மும்பை ஐ.ஐ.டி-யில், 2006-ல் முனைவர் பட்டம் பெற்றார்.

➤ 2011-ல் ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட சிவன், 2014-ல் இஸ்ரோவின் திரவ உந்துவிசை மையத்தின் இயக்குநரானார்.

➤ 2015 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

➤ இஸ்ரோவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சிவன், விருதுகளையும் குவித்துள்ளார்.

➤ 2007ல் இஸ்ரோவின் விருதையும், 2011-ல் டாக்டர் பைரன் ராய் விண்வெளி அறிவியல் விருதையும், சத்யபாமா பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...