இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி

இந்து என்பது மதம் அல்ல; அது ஒருவாழ்க்கை நெறி என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஆந்திராவில் உள்ள திருமலைக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்ய நாயுடு தனது குடும்பத்தினருடன் நேற்று காலை வருகைதந்தார். இதைத் தொடர்ந்து, திருமலையில் உள்ள வராக சுவாமி கோயிலுக்குச் சென்று அவர் வழிபட்டார். அதன்பின்னர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்து என்பது ஒருமதம் அல்ல. மாறாக, ஒருமனிதன் சுத்தமாகவும், சுகாதாரத்துடனும், ஒழுக்கமான முறையிலும் வாழ்வதற்கான சிறந்த நெறிமுறையாகும். இதில் அடங்கிய ஆன்மீகம், யோகா, கலாச்சாரம் போன்றவற்றை அமைதியை நாடும் உலகநாடுகள் பின்பற்றி வருகின்றன. இது நமக்கெல்லாம் பெருமைதருகிற விஷயம்.

முன்னோர்கள் கூறியதுபோல் இந்து தர்மத்தை இறுதிவரை கடைபிடித்தல் அவசியம். மனித தன்மையை இழந்து விடக் கூடாது. சகமனிதர்களுக்கு உதவ வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் கொடுக்காமல் வாழவேண்டும். நான் சிறுவனாக இருந்த போது, திருமலைக்கு வந்து பலமுறை சுவாமி தரிசனம் செய்துள்ளேன். அன்றைக்கு ஏற்பட்ட ஆன்மீக உணர்வை இன்றும் உணர்கிறேன். திருமலை திருப்பதி தேவஸ் தானத்தினர், பக்தர்களுக்காக சிறப்பாக பணியாற்று கின்றனர். சாமானிய பக்தர்களுக்காக அவர்கள் தொடர்ந்துபணியாற்ற வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...