49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றியமைப்பு

ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினை பொருட்களுக்கு, 12 – 18 சதவீதமாக உள்ளவரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது," என, மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறை, கடந்தாண்டு ஜூலை, 1 முதல், நாடுமுழுதும் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு தொடர்பான சட்டம், வரிவிகிதங்கள் குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆய்வுசெய்கிறது. மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண்ஜெட்லி தலைமையிலான இந்த கவுன்சிலில், மாநில நிதி அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.கவுன்சிலின், 25வது கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அருண்ஜெட்லி கூறியதாவது:இந்தகூட்டத்தில், 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு, 12 – 18 சதவீதமாக உள்ள வரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

இதைத் தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரிவிகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது; இது, வரும், 25 முதல் நடைமுறைக்கு வருகிறது.பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட் போன்ற விலக்கு அளிக்கப் பட்டவற்றையும்,

ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டுவருவது குறித்து அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். மாநிலங்களுக்கு இடையே பொருட்களை எடுத்து செல்லும்போது, 'இ – வே பில்' கொண்டுசெல்வது, வரும் பிப்., 1 முதல் கட்டாயமாகிறது. இதன் மூலம், வரி ஏய்ப்பு செய்வது தடுக்கப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...