இந்திய ராணுவத்துக்கு ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்

இந்திய ராணுவத்துக்கு சுமார் ரூ.15,000 கோடி மதிப்பில் புதிய ஆயுத தளவாடங்களை கொள்முதல்செய்ய பாதுகாப்புதளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில், பாதுகாப்பு தளவாடகொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ரூ.1,819 கோடி மதிப்பில் இலகுரக இயந்திரத்துப்பாக்கிகளை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதலில் விலைக்குவாங்கி, பிறகு அதை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.


பாதுகாப்புப் படைகளுக்கு தாக்குதல் ரக ரைஃபிள்களை 7.4 லட்சம் எண்ணிக்கையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ரைஃபிள்களை, இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட இருக்கிறது. இவை, ஆயுத உற்பத்திவாரியம் மற்றும் தனியார் பாதுகாப்புத்தளவாட தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் ரூ.12,280 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட உள்ளன.


இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தொலை தூரத்தில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் நவீனஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை 5,719 எண்ணிக்கையில் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு ரூ.982 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசளவிலான ஒப்பந்தப் புள்ளி விடுவதன்மூலம், இந்த ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதேநேரத்தில், ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்களை இந்தியாவிலேயே முழுவதும் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...