விவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கில் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்துள்ளோம்

விவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கில் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்து, திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன,'' என பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

டில்லியில் '2022க்குள் விவசாய வருமானம் இருமடங்கு' என்ற தலைப்பில்,கருத்தரங்கு நடந்தது. இதில், பிரதமர்மோடி பங்கேற்று பேசியதாவது:

நாட்டில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கவும் அரசு கடமைப்பட்டுள்ளது.

அதனால் தான் 2018 – 19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், விவசாய நலன்களை பாதுகாக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எளிதான கடனுதவி திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் விவசாயிகள் வருமானம் அதிகரிக்கும்.

நாட்டில் கடந்த ஒருஆண்டில் மட்டும், பருப்புவகைகள் உற்பத்தி 1.7 கோடி டன்னிலிருந்து 2.3 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.உற்பத்தி செலவை குறைத்து, தரத்தை உயர்த்தி, சந்தைக்கு விவசாயபொருட்களை எளிதாக எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

மண்வளம் குறித்தும், அதில் எந்த பயிர் சிறப்பாக வளரும் என்பதுபற்றியும், விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால்,உற்பத்தி அதிகரித்துள்ளது. ரசாயன உரங்களின் பயன்பாடு, 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த, 99 நீர்பாசன திட்டங்ளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும்.சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவித்தல், விவசாய கழிவுகளை வருமானமாக மாற்றுவது போன்ற திட்டங்களால், விவசாயிகளின் வருமானம், 2022க்குள், இரு மடங்காகி விடும்.


கரும்பிலிருந்து கிடைக்கும் எத்தனாலை, பெட்ரோலில்10௦ சதவீதம் கலக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...