திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது

திரிபுராவில் பிப்., 18 ம் தேதியும் , நாகாலாந்து மற்றும் மேகால யாவில் பிப்.,27 ம் தேதியும் சட்ட சபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் 59 இடங்களுக்கும், நாகாலாந்தில் 60 இடங்களுக்கும், மேகால யாவில் 59 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான ஓட்டுக்கள் இன்றுகாலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்., நடைபெற்று வருகிறது. திரிபுராவில் இடதுசாரிகட்சி ஆட்சியும், நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி கட்சி ஆட்சியும் நடந்து வருகிறது.

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ., தேர்தலை சந்தித்துள்ளது. மேகாலயாவில் தனித்து போட்டியிட்டது. திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் எனவும், மேகாலயாவில் தொங்கு சட்டசபை அமையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புக்கள் தெரிவித்தன.

திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சிநடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்மந்திரியாக இருந்து வருகிறார். கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் பாஜக வேட்பாளர்களும் மாறிமாறி முன்னிலையில் இருந்தனர். தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பாஜக நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது. தொடர்ந்து முன்னிலை வகித்த பாஜக 40 இடங்களைபிடித்து வெற்றி அடைந்துள்ளது. திரிபுரா சட்ட சபையில் கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத பாஜக இந்த முறை ஆட்சி அமைக்கிறது.

மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இங்கு முகுல் சங்மா முதல்-மந்திரி பதவிவகித்து வருகிறார். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் தேசிய மக்கள் கட்சி 18 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஐக்கிய குடியரசு கட்சி 6 இடங்களிலும், மக்கள் குடியரசு முன்னணி 4 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும், பா.ஜ.க. 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

 
இங்கு ஆட்சியை கைப்பற்ற 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளது.

 

நாகலாந்தில் நாகா மக்கள்முன்னணி கட்சி ஆட்சி நடந்துவருகிறது. இந்த தேர்தலில் பாஜக 32 இடங்களை பிடித்துள்ளது. இங்கும் பா.ஜனதா  ஆட்சியை பிடிக்கிறது. மேகாலயாவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள நிலையில், திரிபுராவிலும், நாகலாந்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திரிபுரா, நாகலாந்தில் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...