இந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது

திரிபுரா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இன்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உலகமெல்லாம் தோல்வி முகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கொள்கைகள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருந்தன் தற்போது அந்த ஒன்றிரண்டு இடங்களையும் ஒரே வெற்றித்துள்ளலில் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றிருக்கிறது.

திரிபுராவை கம்யூனிஸ்டுகள் கட்சி இழந்தது மட்டுமல்லாமல், அங்கு காங்கிரஸ் பூஜ்ய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏதோ இடைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஒன்றிரண்டு வெற்றிகளை வைத்து காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று விடுமென்று பேசி வந்தனர். ஆனால் இன்று இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ{க்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.

இந்தியா முழுமையும் 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி இந்த 2 வெற்றியோடு சேர்த்து 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும். இது சாதாரண சாதனை அல்ல, இது வரலாற்றுச் சாதனையாகும் இதற்காக கடுமையாக உழைத்த நமது பாரதப்பிரதமர் அவர்களுக்கும், அகில பாரத தேசியத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும். மேற்கு வங்கத்தில் ஆண்டு கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது போன்ற வெற்றிகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான கட்சி என்பதனை நிரூபித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை எதிர்கட்சி இல்லாத அளவில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் இதே போன்ற மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தமிழ் தாமரை யாத்திரையில் தொண்டர்கள் உற்சாகமாக பங்கெடுத்து வருகிறார்கள். இந்த யாத்திரையின் நடுவில் தூத்துக்குடியிலிருந்து தான் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இவ்விரு மாநிலங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நமது தொண்டர்கள் நாளை மாநிலம் முழுவதும் மண்டல்ஃகிளை அளவில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த வெற்றி இனிவரும் காலங்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பது வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது. தாமரையும் எல்லாவிடங்களிலும் மலர்ந்து கொண்டே இருக்கும் தமிழகம் உள்பட!

நன்றி. வணக்கம்.
என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.