இந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது

திரிபுரா, நாகாலாந்து ஆகிய இரண்டு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இன்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. உலகமெல்லாம் தோல்வி முகத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டு கொள்கைகள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருந்தன் தற்போது அந்த ஒன்றிரண்டு இடங்களையும் ஒரே வெற்றித்துள்ளலில் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றிருக்கிறது.

திரிபுராவை கம்யூனிஸ்டுகள் கட்சி இழந்தது மட்டுமல்லாமல், அங்கு காங்கிரஸ் பூஜ்ய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏதோ இடைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற ஒன்றிரண்டு வெற்றிகளை வைத்து காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று விடுமென்று பேசி வந்தனர். ஆனால் இன்று இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ{க்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.

இந்தியா முழுமையும் 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி இந்த 2 வெற்றியோடு சேர்த்து 21 மாநிலங்களில் ஆட்சி செய்யும். இது சாதாரண சாதனை அல்ல, இது வரலாற்றுச் சாதனையாகும் இதற்காக கடுமையாக உழைத்த நமது பாரதப்பிரதமர் அவர்களுக்கும், அகில பாரத தேசியத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும். மேற்கு வங்கத்தில் ஆண்டு கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது போன்ற வெற்றிகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான கட்சி என்பதனை நிரூபித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை எதிர்கட்சி இல்லாத அளவில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் இதே போன்ற மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக தமிழ் தாமரை யாத்திரையில் தொண்டர்கள் உற்சாகமாக பங்கெடுத்து வருகிறார்கள். இந்த யாத்திரையின் நடுவில் தூத்துக்குடியிலிருந்து தான் இந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இவ்விரு மாநிலங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாக நமது தொண்டர்கள் நாளை மாநிலம் முழுவதும் மண்டல்ஃகிளை அளவில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த வெற்றி இனிவரும் காலங்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பது வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது. தாமரையும் எல்லாவிடங்களிலும் மலர்ந்து கொண்டே இருக்கும் தமிழகம் உள்பட!

நன்றி. வணக்கம்.
என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...