திராவிடத்தை ஆரம்பித்து, தமிழகத்தை வீழ்த்தியதே பெரியாரின் ஒரே சாதனை!

ஈ.வெ.ராமசாமியைப் பற்றி யாராவது விமர்சித்துப் பேசினால் உடனே அதை எதிர்த்து, சுய சிந்தனையற்ற ஒரு ஆட்டு மந்தைக்கூட்டம் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா?

"தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது.

உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து உரிமைகளும் அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்"

– என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டுகிறார்கள்..

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

#பெரியார் ஈவெரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரது வாழ்நாளில் ஒரு போராட்டம் கூட செய்ததில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?.

(1924 இல் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் என்பது பெரியாரின் போராட்டம் அல்ல .அது காங்கிரஸ்-காந்தி நடத்திய போராட்டம்.

அதில் கலந்துகொண்டார் என்பதை தாழ்த்தப்பட்டோருக்காக போராடினார் என்று மிகைப் படுத்தினார்கள் .

மேலும் வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப்பட்டோருக்கான போராட்டம் அல்ல.ஈழவர்-சானார்-புலையர் இடையிலான போராட்டம்….

அப்படி அவர் தலைமையேற்று போராட்டம் நடத்தியது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் வைக்கம் போன்ற ஒரு போராட்டம் நடத்தவில்லை?

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெரியார் ஏன் தமிழ்நாட்டில் ஒரு போராட்டமும் நடத்தவில்லை?…..என்ற உண்மையை சிந்தித்துப்பாருங்கள் நண்பர்களே! .

..(இதே கேள்வியை தந்திடிவி பேட்டியில் வீரமணியிடம் பாண்டே கேட்டபோது அவரால் சரியான பதில் சொல்ல இயலவில்லை என்பதை பேட்டியை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். )..

.நண்பர்களே! உண்மையான வரலாறு சொல்வது என்ன தெரியுமா?

தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன .அவர்களில் சிலர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

(இவர்கள் பெரியாரின் திராவிடர் கழகத்தினரால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட தலைவர்கள்.தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்த "தலித்"தலைவர்கள்)

1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914)
2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)
3. எம்.சி.ராஜா (1883-1945)
4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964)
5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913)
6. டி.ஜான்ரத்தினம் (1846-1942)
7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936)
8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938)
9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944)
10.ம.பழனிச்சாமி (1870-1941)
11.சுவாமி தேசிகானந்தா (1877-1949)
12.ஆர்.வீரையன் (1886-1938)
13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955)
14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935)
15.ஜி.அப்பாதுரையார் (1890-1962)
16.சுவாமி சகஜானந்தர் (1891-1958)
17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962)
18. பி.பரமேஸ்வரன் (1909-1957)
19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973)
20. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பணி அளவிட முடியாதது
.
– இதுபோன்ற தாழ்த்தப்பட்ட தலைவர்களின் அயராத உழைப்பினாலும் போராட்டங்களாலும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று முன்னேறியிருக்கின்றார்கள்.

இதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் நடத்திய பத்திரிகைகள் :

சூரியோதயம் (1869)
பஞ்சமன் (1871)
சுகிர்தவசனி (1877)
திராவிடமித்திரன் (1885)
திராவிட பாண்டியன் (1885)
பூலோக வியாசன் (1900)
தமிழன் (1907)
ஆதிதிராவிட மித்திரன் (1907)
ஆன்றோர்மித்திரன் (1910)
மகாவிகட தூதன் (1886)
பறையன் (1893)
விகடதூதன் (1897)
இல்லற ஒழுக்கம் (1899)
மதராஸ் டெம்ப்ரன்ஸ்
ஹெரால்ட் (1899)
தமிழன் (கோலார்) (1926)
சாம்பவகுலமித்திரன் (1930)
ஆதிதிராவிட மித்திரன் (சென்னை) (1939)
புத்துயிர் (1940)

இதுபோன்ற எண்ணற்ற பத்திரிகைகள், மாநாடுகள், போராட்டங்கள், கூட்டங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்டோர் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத் தந்தனர்.

ஆனால் இன்று #திராவிடர்_கழகம், தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் பெரியார் பெற்றுத் தந்ததுபோல பேசுவது, எழுதுவது யாரை ஏமாற்ற?

தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இருட்டடிப்பு செய்யும் திராவிடர் கழகத்தினர்

தாழ்த்தப்பட்டவர்களுக்கு #பெரியார் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் என்ற கேள்விக்கு பதில் கூறமாட்டார்கள் ஏன் தெரியுமா?

அவர் அப்படி ஒரு போராட்டமும் செய்ததில்லை என்பதே உண்மை.

 

தமிழகத்தின் சாபக்கேடாக விளங்கும்
திராவிட இயக்கத்தை ஆரம்பித்து, தமிழகத்தை வீழ்த்தியதே இவரது ஒரே சாதனை!
நன்றி.. குறிச்சி சக்திவேல் Whatsapp பதிவு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...