பிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் சிலருக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி அளிக்கப் பட்டு வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்தார்.

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின்கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் எழுத்துமூலம் அளித்த பதில்:

பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தீவிரவாத செயல்களுக்கு ஊக்கமளித்துவரும் தீவிரவாத இயக்கத் தலைவர்கள் சிலருடன் காஷ்மீரிலுள்ள பிரிவினைவாத இயக்கதலைவர்கள் தொடர்பில் உள்ளனர்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தானிலிருந்து நிதியுதவியும் வருகிறது. அங்கிருந்து சிலஉத்தரவுகளும் வருகின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்களை ஊக்குவிக்க இதுபோன்ற நிதியுதவி அங்கிருந்து பெறப்பட்டு வருவதாகத்தெரிகிறது.

இதுபோன்ற பிரிவினைவாத தலைவர்கள் யார் என்பதை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. அண்மையில் பிரிவினைவா தலைவர்கள் சிலரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) கைதுசெய்துள்ளனர். அவர்களுக்கு எங்கிருந்து நிதியுதவி வருகிறது என்பது தொடர்பான தகவல்களும் பெறப்பட்டுள்ளன.

மேலும் அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள்மீது தக்க நடவடிக்கைகளை பாதுகாப்புப் படைகள் மேற்கொள்கின்றன. மேலும் தீவிரவாத செயல்களுக்காக நிதியுதவி கிடைப்பதை தடுக்கவும் விசாரிக்கவும் தேசியபுலனாய்வு அமைப்பு தனி மையத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...