தமிழ்நாட்டில் நூலகங்கள் மேம்பாட்டிற்கு ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு

மத்திய கலாச்சார துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம்  நாடு முழுவதும் உள்ள நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு 2019-20 நிதியாண்டில் ரூ. 1.74 கோடியும், 2020-21 நிதியாண்டில் ரூ. 79 லட்சமும், 2021-22 நிதியாண்டில் ரூ. 1.68 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ. 80 லட்சமும், 2023-24 நிதியாண்டில் ரூ. 1.44  கோடியும் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு  2019-20 நிதியாண்டில்  ரூ.7.81 லட்சமும், 2022-23 நிதியாண்டில் ரூ.5.74 லட்சமும் 2023-24 நிதியாண்டில்  ரூ. 1.92 லட்சமும், நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை மூலம் பொது நூலகங்கள் நவீன மயத்திற்கு தமிழ்நாட்டில் 401 நூலகங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நூலக இயக்கத்தின் கீழ், மாதிரி நூலகம் அமைப்பதற்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நூலகத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் 97.37 லட்சம் ரூபாயும், வேலூர் மாவட்ட நூலகத்திற்கு 91.11 லட்சம் ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்காலில் உள்ள டாக்டர் எஸ் ஆர் ரங்கநாதன் அரசு பொது நூலகத்திற்கு ரூ. 87.02 லட்சமும் வழங்கப்பட்டிருப்பதாக திரு ஷெகாவத் கூறினார்.

கலாச்சார துறையால் மாதிரி நூலகமாக அடையாளம் காணப்பட்டுள்ள தஞ்சாவூர் மகராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்திற்கு ரூ. 6 கோடியே 67 லட்சம் விடுவிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் திரு ஷெகாவத் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...