காங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி

மத்திய திறன்வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே,  நேற்று பெலகாவியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி  பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது.

நமது நாட்டில் இந்துமதமும் உள்ளது என்பதை ராகுல் காந்தி இப்போது தான் தெரிந்து கொண்டுள்ளார். அதனால் தான் அவர் கோவில்கள், மடங்களுக்குசெல்ல தொடங்கி இருக்கிறார். கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தை எப்படி பெறுவது என்பதுகூட ராகுல் காந்திக்கு தெரியாது. யாரோ சிலர் கூறியதால் அவர் கோவில்களுக்கு செல்கிறார்.

காவி உடையில் ருத்ராட்சை மாலையுடன் கோவிலுக்கும், குல்லாஅணிந்து மசூதிகளுக்கும் ராகுல் காந்தி செல்கிறார். இதன் மூலம் அவர் நாடகம்நடத்தி வருகிறார். இதில் வேறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் ஒருநாடக கம்பெனி. காங்கிரஸ் இருக்கும் வரை நாடு வளர்ச்சி அடையாது. காங்கிரசாருக்கு நேர்மைகிடையாது.

பக்தியுடன் கோவில்களுக்கு செல்லதெரியாது. மற்றவர்கள் போகிறார்கள் என்பதற்காக காங்கிரசார் கோவில்களுக்கு செல்கிறார்கள். வரும்நாட்களில் இந்த நாடக கம்பெனி நாட்டில் இருக்கக் கூடாது. நாட்டை காங்கிரஸ் கொள்ளை யடிக்கிறது. மதத்தை அவமரியாதையாக நடத்துகிறது. இவ்வாறு அனந்த குமார் ஹெக்டே பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.