நெல், பருத்தி, பருப்பு ஆதார விலையை உயர்த்தி மோடி அறிவிப்பு

விவசாயிகள் உற்பத்திசெய்யும் உணவு தானியங்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் மத்தியஅரசின் இந்திய உணவுகழகம் நேரடியாக கொள்முதல்செய்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வினியோகம் செய்து வருகிறது. இதற்காக உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலையை அரசு நிர்ணயிக்கிறது.

 

நாடுமுழுவதும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில் பிரதமர் நரேந்திரமோடி தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒருபகுதியாக விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

 

முன்னதாக, விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திசெலவை விட 1½ மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் நோக்கில் கடந்த பட்ஜெட்டிலும் இதற்கான அறிவிப்பு வெளியானது.

 

அதன்படி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபைக்குழு, 14 சம்பா (கரீப்) பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளித்தது.

 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, நெல்லுக்கு (பொது ரகம்) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.1750 (பழைய விலை ரூ.1550) ஆக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் ‘ஏ’ ரக நெல்லுக்கும் ரூ.160 உயர்த்தப்பட்டு ரூ.1750 (பழைய விலை ரூ.1590) என நிர்ணயிக்கப்பட்டது.

 

பருப்புவகைகளை பொறுத்தவரை, துவரம் பருப்புக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,450-ல் இருந்து ரூ.5,675 ஆகவும், பாசிப்பருப்புக்கு ரூ.5,575-ல் இருந்து ரூ.6,975 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. உளுந்தம் பருப்புக்கு ரூ.5,400-ல் இருந்து ரூ.5,600 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

இதைப்போல பருத்திக்கு (நடுத்தர ரகம்) ரூ.4,020-ல் இருந்து ரூ.5,150 ஆகவும், நீண்ட ரகத்துக்கு ரூ.4,320-ல் இருந்து ரூ.5,450 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

 

எண்ணெய் வித்துகளில் சோயா பீன்சுக்கு ரூ.3,050-ல் (குவிண்டால்) இருந்து ரூ.3,399 ஆகவும், நிலக்கடலைக்கு (ஓட்டுடன்) ரூ.4,450-ல் இருந்து ரூ.4,890 ஆகவும் சூரியகாந்திக்கு ரூ.4,100-ல் இருந்து ரூ.5,388 ஆகவும் உயர்த்தப்படுகிறது. எள்ளுக்கு ரூ.5,300-ல் இருந்து ரூ.6,249 ஆகவும், நைகர் விதைகளுக்கு ரூ.4,050-ல் இருந்து ரூ.5,877 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த தகவல்களை மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் விளக்கிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பிற சம்பா பருவ பயிர்களுக்கும் உற்பத்தி விலையைவிட சுமார் 50 சதவீதம் அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த விலை உயர்வால் மாநில அரசுகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதல் செலவாகும் என்று கூறிய அவர், குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதால், உணவு தானியங்களின் விலையில் எவ்விதமாற்றமும் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

 

அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், இதன் மூலம் அனைத்து விளைபொருட்களும் குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் கொண்டுவருவது உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் தங்கள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பதாகவும், இதற்கும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் எவ்விததொடர்பும் இல்லை என்றும் கூறினார்.

 

இதற்கிடையே குறைந்தபட்ச ஆதரவுவிலை உயர்வால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்தோம். எதிர்காலத்திலும் அதையே மேற்கொள்வோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...