நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார். அவர் கட்சிநிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேச திட்ட மிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜக தயாராகிவருகிறது. இதன் ஒருபகுதியாக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பாஜகவின் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு மாநிலமாக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் சக்திகேந்திர ெபாறுப்பாளர்களை சந்திக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை(திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை வருகிறார். தொடர்ந்து அவர் தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். பிற்பகல் 3 மணியளவில் கிழக்குகடற்கரை சாலையில் உள்ள விஜிபி தங்க கடற்ரையில் கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள், பாஜ மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 20,000 பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்தகூட்டத்தில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது, வெற்றி வியூகம், பிரசாரவியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் தமிழகத்தில் பாஜவை வலுப்படுத்துவதற்காக அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழகரசியல் நிலவரம் குறித்தும் அவர் லாசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலும் பாஜக நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்துபேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு அமித் ஷா சென்னையில் தங்குகிறார். மறுநாள் 10ம் தேதி காலை அவர் டெல்லி புறப்பட்டுசெல்கிறார்.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.