வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல

அசாமில் தயாரிக்கப் பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில்,  40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

அசாம் உடன்படிக்கை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் கையெழுத்து போடப்பட்டது. அப்போது தேசியகுடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசாருக்கு எந்தபிரச்சினையும் இல்லை.

மேற்கு வங்காளத்தில் முந்தைய கம்யூனிஸ்டு ஆட்சியினருக்கு வங்கதேச ஊடுருவல் காரர்கள் வாக்கு வங்கியாக இருந்தனர். தற்போது அவர்கள் திரிணாமுல் காங்கிரசாரின் வாக்குவங்கியாக மாறிவிட்டனர்.

எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் காங்கிரசும், திரிணாமுல் காங்கிரசும் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடுகின்றன. நாட்டின் பாதுகாப்பைவிட வாக்கு வங்கிதான் முக்கியமா? என்பதை ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த பதிவேடு மூலம் வெளிநாட்டு அகதிகள் நாடு கடத்தப் படுவார்கள் என கூறப்படுவது தவறு. இதன்மூலம் அகதிகளுக்கு எதுவும் நேரிடாது என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். அகதிகளுக்கும், சட்டவிரோத குடியேறிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், புத்த மதத்தினர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்காகவே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை (திருத்தம்) மசோதாவை கொண்டு வந்தது.

இங்கு, ‘வங்காளத்துக்கு எதிரான பா.ஜனதாவே வங்காளத்தை விட்டுவெளியேறு’ என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் வங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எதிரி அல்ல. மாநிலத்தை தவறாக ஆட்சி செய்யும் மம்தாவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும்தான் எதிரி.

எனது உரையை மக்கள் கேட்காமல் இருக்க மாநில அரசு பலஇடங்களில் தொலைக்காட்சி ஒளிபரப்பை இருட்டடிப்பு செய்துள்ளது. ஆனால் பா.ஜனதா தொண்டர்களே எனது உரையை மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் கொண்டுசேர்ப்பார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...