21 குண்டுகள் முழுங்க, முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்:

பாஜகவின் முது பெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் (வயது93) உடல் 21 குண்டுகள் முழங்க, முழுராணுவ மரியாதையுடன் இன்று டெல்லியில் உள்ள ஸ்மிருதி ஸ்தலத்தில் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கின் போது, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், பூடான் நாட்டுமன்னர் ஜிக்மீ கேசர் நம்கியால் வாங்கச், வங்கதேச வெளியுறவு அமைச்சர் அபுல்ஹசன் முகமது அலி, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி, முன்னாள் ஆப்கன் அதிபர் ஹமீது ஹர்சாய், இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமணன் கெய்ரில்லா ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

3-முறை பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் வயதுமூப்பு, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.

அங்குக் கடந்த 2 மாதங்கள் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமலும், உடல் உறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக் காததாலும் நேற்றுமாலை 5.05 மணிக்கு காலமானார்.

இதையடுத்து, பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், மாநில முதல்வர்கள் பலர் நேரில்வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பின் வாஜ்பாயின் உடல் பொது மக்கள், தொண்டர்களின் பார்வைக்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியெங்கும் வாஜ்பாயின் உடலுக்கு ஆயிரக் கணக்கான மக்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாஜ்பாயின் உடலுக்கு பாஜக தலைவர்கள், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி முடிந்ததும், பூங்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவவாகனத்தில் வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டு, அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள உடல்தகனம் செய்யும் ஸ்மிருதி ஸ்தலம் இடத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், பாஜக அலுவலக்தில் இருந்து 4 கி.மீ நடந்துசென்று உடல் தகனம் செய்யும் ஸ்மிருதி ஸ்தலத்தை அடைந்தனர். வழியெங்கும் வாஜ்பாயின் புகழ்பாடி தொண்டர்கள் முழக்கமிட்டுக் கொண்டே வந்தனர்.

தகனம் செய்யும் ஸ்மிருதி ஸ்தலத்துக்கு ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் உடல் கொண்டு வரப்பட்டு, அதை ராணுவ வீரர்கள் இறக்கினார்கள். அப்போது துக்கம் தாங்காமல் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்களும் கண் கலங்கினர்.

உடல்தகனம் செய்யும் இடத்தில் வாஜ்பாயின் உடல் வைக்கப்பட்டதும், ராணுவ இசை வாசிக்கப்பட்டு, வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. அதன்பின் முப்படைத் தளபதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

 

அதன்பின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அனைவரும் எழுந்து நின்ற அஞ்சலி செலுத்தினார்கள். வாஜ்பாயின் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடி அகற்றப்பட்டு அவரின் பேத்தி நிகாரிகாவிடம் வழங்கப்பட்டது.

இந்துமதத்தின்படி வேத, மந்திரங்கள் ஓதப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. வாஜ்பாயின் உடலில் சந்தனக் கட்டைகள், பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வறட்டிகள் அடுக்கப்பட்டு அவரின் உடலுக்கு எரியூட்டப் பட்டது. அப்போது, ராணுவத்தினர் 21 குண்டுகளை வானத்தை நோக்கிச்சுட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

வாஜ்பாயின் உடல் எரியூட்டப்பட்டதும் அவரின் உறவினர்களும், குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...