ஓசி சவாரி வெளுத்து விட்டது

காங்கிரஸ்சால் தான் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை கூட பெரமுடியத நிலையில் உள்ளது, மத்தியில் ஆளும் இந்த தேசிய கட்சியால் ஒரு நகராட்சி தலைவர் பதவியைக்கூட பெற முடியவில்லை, தங்களுக்கு தனி செல்வாக்கு இருக்கு என்று பில்டப் கொடுத்த தலைவகள் எல்லாம் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை,

இந்த் தேர்தல் மட்டுமல்ல இனி வருகிற எல்லாத் தேர்தலிலும் அவங்க தனித்தே போட்டியிடுவாங்கலாம் . வேண்டுமானால் மற்றவர்கள் அவங்கள்ட்ட கூட்டணி பேச போகனுமா இந்த வீரவசனத்துக்கு சொந்தக்காறு நம்ம தங்கபாலு எந்த முகத்தை வைத்துக் கொண்டு இனி பேசுவார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

எங்களுக்கு சுமை குறைந்துவிட்டது திமுகவிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது
இந்த வீரவசனத்துக்கு சொந்தக்காறு நம்ம ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசின்_தோல்விக்கு திமுகவின் ஊழல்தான் காரணம் என்று வீரவசனம் பேசியவர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா.

இப்படி வீரவசனம் பேசிய தலைவர்கள் தங்கள் சொந்த ஊரில் எத்தனை கவுன்சிலர் பதவிகளை பிடித்தார்கள் என்பது கேள்விக்குறியே, இதுதான் காங்கிரஸின் உண்மையான நிலை, இத்தனை காலமும் அது ஓசி சவாரி செய்து செய்தே பழக்கபட்டுவிட்டதால் உண்மையான பலத்தை இப்போதுதான் அந்தகட்சி மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழகமும் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளனர், இந்த புகழ் அனைத்தும் இந்த தலைவர்களையே சேரும் ,

சென்னையில் ஒரு வார்டு கவுன்சிலரை கூடப்பெற முடியவில்லை இந்தகட்சியால். ஒரு நகராட்சித் தலைவர் பதவியை கூட பெற முடியவில்லை . கடந்த சட்டசபை தேர்தலில் திமுக புண்ணியத்தில் குமரி_மாவட்டத்தில் ஓரளவு செல்வாக்கு இருப்பதாக தெரிந்தது காங்கிரஸுக்கு இந்தமுறை முட்டையைத்தான் மக்கள் பரிசாக தந்துள்ளனர்.

மொத்தத்தில் இவ்வளவு காலமா இத்தனை சதவீதம் வாக்கு இருக்கிறது என்று பில்டப் தந்து ஓசி சவாரி செய்து உழைக்காமல் பிழைத்து வந்த காங்கிரஸின் சுயரூபம் வெளுத்து விட்டது.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...